Breaking News

இராணுவத்தை வைத்திருக்கவா சுமந்திரனின் நாடகம்?-விக்கி(காணொளி)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தரன் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் பல்வேறு கோணங்களில் நாளாந்தம் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் வடமாகாணத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினரை நிலைநிறுத்துவதற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்து அரசாங்கம் நாடகமாடுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஐவருக்கும், அவர்களுக்கு எதிராக ஆயுத வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை மாறாக போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிகின்றேன். உண்மையாக கொலைக்குற்றச்சாட்டுக்களோ ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அதனை உறுதிப்படுத்தி வழக்கு தாக்கல் செய்யலாம் அவர்கள் அப்படி செய்யவில்லை.

இதனால் சுமந்திரனை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விடயத்தில் சந்தேகம் காணப்படுவதாகவும் முன்னரும் இதுபோல புலிகள் வீட்டுக்கு வந்ததாக சொல்லி விஜயகுமாரி உட்பட பலர் கைதுசெய்யப்பட்டதாக கூறிய முதலமைச்சர் இராணுவத்தை தொடர்ந்தும் வடக்கில் நிலைநிறுத்துவதற்கான திட்டமா என எண்ணத்தோன்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.