Breaking News

நில மீட்பிற்கான சுழற்சி முறை போராட்டம் நான்காவது நாளாக தொடர்கிறது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டம் பதினான்காம் நாளகவும் தொடரும் அதேவேளை சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது.


புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களிற்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியே குறித்த போராட்டம் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்பதாம் திகதி ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததுடன், தமது காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடருமெனவும் மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி ஆரம்பித்த இந்த போராட்டம் தீர்வின்றிய நிலையில் தொடர்வதாகவும், எனினும் தமக்கான தீர்வினை விரைவாக வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.