Breaking News

இரண்டாவது நாளாக தொடரும் உணவுத் தவிர்ப்பு போராட்டம்



கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த முதலாம் திகதி தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று பன்னிரண்டாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

கேப்பாபுலவு கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட புலவுக்குடியிருப்பு, சீனியாமோட்டை, சூரிபுரம் ஆகியவற்றை போராட்டம் மூலம் பெற்றுக்கொண்ட மக்கள் பூர்வீக நிலத்தை மீட்கும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பொருளாதார வளங்கள், வீடுகள் என்பவற்றை இராணுவம் கையகப்படுத்தியுள்ள நிலையில் தாம் வீதிகளில் போராடி வருவதாக மக்கள் தெரிவித்தனர்.கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த முதலாம் திகதி தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று பன்னிரண்டாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

கேப்பாபுலவு கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட புலவுக்குடியிருப்பு, சீனியாமோட்டை, சூரிபுரம் ஆகியவற்றை போராட்டம் மூலம் பெற்றுக்கொண்ட மக்கள் பூர்வீக நிலத்தை மீட்கும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பொருளாதார வளங்கள், வீடுகள் என்பவற்றை இராணுவம் கையகப்படுத்தியுள்ள நிலையில் தாம் வீதிகளில் போராடி வருவதாக மக்கள் தெரிவித்தனர்.