Breaking News

வடக்கு, கிழக்கு தழுவிய ஹர்த்தால் நாளை காணாமல்போனோரின் உறவுகள் ஏற்பாடு

வலி சுமந்த பல போராட்டங்கள் வடக்கு - கிழக்கு எங்கும் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் நாளை 27ஆம் திகதி வியாழக்கிழமை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. 

மேற்படி ஹர்த்தாலுக்கு அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், மாணவர்கள், வர்த்தகர்கள் என பல தரப்பட்டவர்களும் போராட்டத்துக்கு அழைப்பையும், ஆதரவினையும் வலுச்சேர்க்கும் வகையில் வெளியிட்டு வருகின்றனர்.