Breaking News

முல்லைத்தீவில் இராணுவ பேருந்து மீது கல்வீச்சு



முல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நேற்றுமுன்தினம் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, நேற்று முன்தினம் மாலை முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற இராணுவத்தினரின் பேருந்து மீதே கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் பேருந்துக் கண்ணாடி ஒன்று நொருங்கிய போதிலும், அதில் சென்ற எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இந்தச் சம்பவத்தை அடுத்து முல்லைத்தீவின் பிரதான வீதிகளில் நேற்று சிறிலங்கா இராணுவத்தினர் காவல் பணிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.