Breaking News

ஈழத் தமிழருக்கு லண்டனில் சிறைத்தண்டனை!



லண்டனில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள ஈழத் தமிழ் இளைஞர்கள் நால்வருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற குழு மோதலில் லண்டன் இளைஞன் ஒருவர் (26 – வயது) கொலைசெய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக, லண்டன் உயர் நீதிமன்றத்தால் நேற்று (புதன்கிழமை) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதலாவது சந்தேகநபருக்கு 29 ஆண்டுகளும், இரண்டாவது சந்தேகநபருக்க 14 ஆண்டுகளும், மூன்றாவது சந்தேகநபருக்கு 31 மாதங்களும் நான்காவது சந்தேகநபருக்கு 21 மாதங்களும் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.