Breaking News

சம்பந்தன் காலத்தில் முடியாவிடின் ஒருபோதும் தீர்வுகாண முடியாது!



நான் ஒரு மித­வாத மற்றும் தேசிய பிரச்­சி­னைக்கு விரைந்து தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மென விரும்­பு­கின்­றவன் என்ற அடிப்­ப­டையில் ஒரு விட­யத்தை தெ ளிவாக குறிப்­பி­டு­கின்றேன்.

அதா­வது தீர்வு விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் வெளிப்­ப­டுத்தும் அர்ப்­ப­ணிப்பு மற்றும் புரிந்­து­ணர்வைக் கண்டு வியந்து பாராட்­டு­கின்றேன்.

எனவே சம்­பந்தன் இந்த பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்ற காலப்­ப­கு­திக்­குள்­ளேயே இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் கண்டுவி­ட­வேண்டும்.

அவ்­வாறு சம்­பந்தன் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்ற காலப்­ப­கு­தியில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடி­யா­விடின் எமது வரலாற்றில் இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடி­யா­ம­லேயே போய்­விடும் என்று அமைச்­ச­ர­வையின் இணைப் பேச்­சா­ளரும் அமைச்சரு­மான தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.

இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக ஒற்­றை யாட்சி முறை­மையின் கீழ் 13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கு தயார் என்­ப­தனை அறி­விக்­கின்றோம்.

அத்­துடன் செனட் சபை குறித்து பரி­சீ­லிக்­கலாம். இந்த இடத்­துக்கு சுதந்­திரக் கட்சி வந்­துள்­ளமை வர­லாற்று திருப்பு முனை­யாகும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கே: நல்­லாட்சி அர­சாங்­கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி திருப்­தி­யுடன் அங்கம் வகிக்­கி­றதா?

ப: கடந்த 2015 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்தல் முடி­வ­டைந்­த­துடன் எந்­த­வொரு கட்­சிக்கும் 113 ஆச­னங்கள் கிடைக்­க­வில்லை. பிரதான இரண்டு கட்­சி­களும் ஏனைய கட்­சி­க­ளி­லி­ருந்து எம்.பி.க்களை பிரித்­தெ­டுத்து வேண்­டு­மானால் ஆட்சி அமைத்­தி­ருக்­கலாம்.

ஆனால் அவ்­வாறு செய்­ய­வில்லை. அது­மட்­டு­மன்றி 19 ஆவது திருத்த சட்­டத்தின் பிர­காரம் நான்­கரை வரு­டங்கள் செல்­லும்­வரை பாராளு­மன்­றத்தை கலைக்க முடி­யாது. ஒரு வரு­டத்தில் பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்கு ஜனா­தி­ப­திக்கு இருந்த அதி­காரம் 19 ஆவது திருத்தச் சட்­டத்­தி­னூ­டாக நீக்­கப்­பட்­டது.

இந் நிலையில் 106 ஆச­னங்­களை பெற்ற ஐக்­கிய தேசியக் கட்சி மட்டும் ஆட்­சி­ய­மைத்­தி­ருந்தால் நான்கு வரு­டங்­க­ளுக்கு நாம் எதுவும் செய்ய முடி­யாது.

அத­னால்தான் பல்­வேறு பொது­வான நோக்­கங்­களை பிர­தா­ன­மாகக் கொண்டு இரண்டு கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தன. மிக முக்­கி­ய­மாக தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காணுதல், பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­புதல் போன்ற நோக்­கங்­களை நிறை­வேற்ற தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டது.

இதில் முரண்­பா­டுகள் பிரச்­சி­னைகள் நெருக்­க­டிகள் உள்­ளன. எனினும் தேசிய பிரச்­சினை தீர்வு உள்­ளிட்ட முக்­கிய விட­யங்­க­ளுக்­காக நாம் பொறு­மை­யுடன் பய­ணிக்­கின்றோம்.

கே: அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகி விடுவோம் என சுதந்­திரக் கட்சி கரு­தி­ய­துண்டா?

ப: சில சந்­தர்ப்­பங்­களில் அதி­ருப்­திகள் ஏற்­பட்­டுள்­ளன. ஆனால் நாங்கள் அர­சாங்­கத்தை விட்டு வெ ளியே­றினால் ஐக்­கிய தேசியக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைத்­து­விடும். அதற்கு இட­ம­ளிக்க முடி­யாது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந் நாட்டின் தலைவர். அது­மட்­டு­மன்றி அவர் எமது கட்­சியின் தலைவர். எனவே தேசிய ஒற்­றுமை உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­க­ளுக்­காக நாங்கள் இணைந்து பய­ணிக்க வேண்­டிய தேவை­யுள்­ளது. மிக முக்­கி­ய­மாக இந்த நாட்டின் புரையோ­டிப்­போ­யுள்ள தேசிய பிரச்­சி­னையை தீர்ப்­பது எமது பிர­தான நோக்­க­மாக இருக்­கி­றது. எனவே அதற்­காக பொறு­மை­யுடன் பயணிக்­கிறோம்.

கே: அடுத்த மூன்று வரு­டங்­க­ளுக்கு ஐ.தே.க., சு.க. உறவு எவ்­வாறு நீடிக்கும்?

ப: எதிர்­வரும் மூன்று வரு­டங்­க­ளுக்கும் இரண்டு கட்­சி­களும் இணைந்து செயற்­ப­டு­வது தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

அதா­வது எதிர்­வரும் டிசம்பர் மாதத்­திற்கு முன்னர் இது தொடர்­பான பேச்­சு­வார்த்தை நிறை­வ­டைய வேண்­டி­யுள்­ளது. அதற்­கி­டையில் இரண்டு கட்­சி­களும் இது தொடர்பில் இணக்­கப்­பாட்­டிற்கு வரும் என நாம் நம்­பு­கிறோம். மிக முக்­கி­ய­மாக யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் இது­வரை எம்மால் தேசிய பிரச்­சி­னையை தீர்க்க முடி­ய­வில்லை.

பயங்­க­ர­வாதம் முறி­ய­டிக்­கப்­பட்­டாலும் எம்மால் பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடி­ய­வில்லை. எனவே எப்­ப­டி­யா­வது அடுத்த மூன்று வரு­டங்­களும் இணைந்து பய­ணித்து தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு கண்டு விட வேண்டும். இதற்­கா­க­வா­வது எதிர்­வரும் மூன்று வரு­டங்கள் நாங்கள் இணைந்து பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது.

கே: இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு குறித்து நீங்கள் ஆழ­மாக பேசு­கின்­றீர்கள். எனினும் அதி­காரப் பகிர்வு விட­யத்தில் தொடர்ந்து முரண்பாடுகள் காணப்­ப­டு­கின்­றன. சமஷ்டி முறைமை, வட கிழக்கு இணைப்பு என்­ப­வற்றை தமிழ் கூட்­ட­மைப்பு கூறு­கி­றது. ஆனால் பிர­தான கட்­சிகள் இரண்டும் அதனை எதிர்க்­கின்­றன. எனவே தீர்வு என்­பது எவ்­வாறு சாத்­தி­ய­மாகும்.

ப: இது­தொ­டர்பில் அனைத்து தரப்­பி­னரும் தெளிவாக இருக்­கின்­றனர். இங்கு ஒற்­றை­யாட்சி என்­பதன் அர்த்தம் தொடர்பில் நாம் புரிந்து கொள்ள வேண்­டி­யுள்­ளது. ஒற்றையாட்சி என்­பது பிரி­ப­டாத நாட்­டுக்குள் தீர்வு என்­ப­தாகும்.

சமஷ்டி என்­பது முடி­யாத ஒரு விட­ய­மாகும். இதனை தமிழ் கூட்­ட­மைப்பும் உணர்ந்து கொண்­டுள்­ளது என்­பதை நம்­பு­கிறோம். 13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்டும் என்­பது தற்­போது எமது நோக்­க­மாகும். அந்த இடத்­திற்கு சுதந்­திரக் கட்சி வந்துள்­ள­மையே மிகப் பெரிய திருப்பு முனை­யாகும்.

13 ஆம் திருத்தச் சட்­டத்­திற்கு அப்பால் செல்ல முடியும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த கூறினார். செனட் சபை என்ற விட­யத்தில் அதற்கு நாமும் தயார். ஆனால் ஒற்­றை­யாட்­சியின் கீழேயே அது இருக்க வேண்டும்.

இதில் முரண்­பா­டுகள் எழலாம். ஆனால் ஐ.தே.க.வும், சுதந்­திரக் கட்­சியும், தமிழ் கூட்­ட­மைப்பும் இணைந்து பேச்­சு­வார்த்தை நடத்தி இந்த விட­யத்தில் இணக்­கப்­பாட்­டிற்கு வர­வேண்டும்.

இங்கு தீர்வை அடை­வ­தற்­கான அர்ப்­ப­ணிப்பே முக்­கியம். ஒற்­றை­யாட்சி முறை­மையில் 13 ஆவது திருத்த சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் தயார் என்­ப­துடன் செனட் சபை குறித்து பரி­சீ­லிக்­கலாம் என்­பதை தெரி­விக்­கிறோம்.

கே:13 ஆவது திருத்தச் சட்டம் முழு­மை­யாக அமு­லாகும் எனும்­போது பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் வரு­கின்­ற­னவே?

ப: பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் அதில் வரு­கின்­றன. பொலிஸ் அதி­கா­ரங்­களை ஒவ்­வொரு மாகா­ணத்­துக்கும் பொலிஸ் ஆணைக்­கு­ழுக்­களை நிய­மித்து வழங்க முடியும். காணி அதி­கா­ரங்­களும் மாகாண காணி ஆணைக்­கு­ழுவை நிய­மித்து வழங்க முடியும். இது இறுதி தீர்­மானம் அல்ல. எனினும் இதி­லி­ருந்து பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பிக்­கலாம். இந்த இடத்­துக்கு நாங்கள் வந்­துள்­ள­மையே மிகப்­பெ­ரிய திருப்­பு­மு­னை­யாகும்.

எனவே இதனை எந்தத் தரப்­பி­ன­ரதும் இன­வா­திகள் குழப்­பி­வி­டக்­கூ­டாது. குறிப்­பாக எமது முயற்­சியை வடக்கு முதல்வர் குழப்­பி­வி­டு­வாரோ என்று நாங்கள் அஞ்­சு­கின்றோம்.

சம்­பந்தன் மற்றும் சுமந்­திரன் ஆகியோர் மித­வாதப் போக்கில் தமிழ் மக்­க­ளுக்கு எப்­ப­டி­யா­வது தீர்வைப் பெற­வேண்டும் என்று செயற்­பட்­டு­வ­ரு­கின்­றனர். ஆனால் வடக்கில் ஒரு பகு­தி­யினர் இதனை குழப்­பி­வ­ரு­கின்­றமை தெ ளிவா­கின்­றது. மறு­புறம் தெற்­கிலும் சிலர் இன­வா­தத்தை முன்­னெ­டுக்­கின்­றனர்.

கே: அர­சியல் தீர்வை பெற­வேண்டும் என்­ப­தற்­காக கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் அர­சாங்­கத்­துடன் புரிந்­து­ணர்­வுடன் செயற்­ப­டு­கின்றார். இது அவ­ருக்கு வடக்கில் சில நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அவரின் ஆபத்­தான இந்த அர­சியல் நிலை குறித்து அர­சாங்கம் புரிந்­து­கொண்­டுள்­ளதா?

ப: நிச்­ச­ய­மாக சம்­பந்­தனின் இந்த நிலையை நாங்கள் புரிந்­து­கொண்­டுள்ளோம். அத­னால்தான் விரை­வாக எப்­ப­டி­யா­வது தீர்வை அடை­ய­வேண்டும் என்று முயற்­சிக்­கின்றோம்.

அதற்­கா­கத்தான் சில சிக்­கல்­க­ளுக்கு மத்­தியில் இரண்டு கட்­சி­களும் இணைந்து பய­ணித்­து­வ­ரு­கின்­றன. என்னைப் பொறுத்­த­வ­ரையில் 2000 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­வுத்­திட்­டம்தான் மிகச் சிறந்­தது. அதில் ஐக்­கிய இலங்கை என்ற விடயம் காணப்­பட்­டது.

ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அன்று தமிழ்த் தலை­வர்கள் அதனை நிரா­க­ரித்­தனர். தற்­போது அனைத்தும் தலைகீழ் மாறி­விட்­டன. இன்று அவ்­வா­றான ஒரு நிலைக்கு செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

ஆனால் தற்­போ­தைய நிலை­மையில் நான் ஒரு மித­வாத மற்றும் தேசிய பிரச்­சி­னைக்கு விரைந்து தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்று விரும்­பு­கின்­றவன் என்ற அடிப்­ப­டையில் ஒரு விட­யத்தை இங்கு கூறு­கின்றேன்.

அதா­வது தீர்வு விட­யத்தில் தமிழ்க் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் வெ ளிப்­ப­டுத்தும் அர்ப்­ப­ணிப்பு மற்றும் புரிந்­து­ணர்வைக் கண்டு வியந்து பாராட்­டு­கின்றேன். இதனை வைத்து ஒரு விட­யத்தை திட்­ட­வட்­ட­மாக கூறு­கின்றேன். அதா­வது சம்­பந்தன் இந்த பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்ற காலப்­ப­கு­திக்­குள்­ளேயே இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் கண்­டு­வி­ட­வேண்டும்.

அவ்­வாறு சம்­பந்தன் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்ற காலப்­ப­கு­தியில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடி­யா­விடின் எமது வர­லாற்றில் இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடி­யா­ம­லேயே போய்­விடும்.

இதனை அனை­வரும் உணர்ந்­து­கொள்­ள­வேண்டும். எனவே சம்­பந்தன் பாரா­ளு­மன்­றத்தில் இருக்­கின்ற காலத்­தி­லேயே இந்தப் பிரச்­சி­னையை தீர்த்­து­வி­ட­வேண்டும். சுதந்­திரக் கட்சி என்ற வகையில் இதில் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம். இதுவே எம்மைப் போன்ற மித­வாத தலை­வர்­களின் நோக்­க­மாகும்.

கே:காணாமல் போனோர் தொடர்ந்தும் தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ப­தனை வெளிப்­ப­டுத்­தக்­கோரி போராடிவ­ரு­கின்­றனர். இதற்கு என்ன தீர்வு?

ப: இது மிகவும் உணர்­வு­பூர்­வ­மான விடயம். இதில் உள்ள யதார்த்­தத்தை நாம் புரிந்­து­கொள்­ள­வேண்டும். 1988 ஆம் ஆண்டு ஆயி­ரக்­க­ணக்­கானோர் காணாமல் போயினர். தற்­போது வடக்கு கிழக்கு யுத்­தத்தில் பலர் காணாமல் போயுள்­ளனர்.

யுத்தம் என்று வரும்­போது இவ்­வா­றான நிகழ்­வுகள் நடை­பெறும். அவர்­களை தேடு­வதும் மிகவும் கடி­ன­மாகும். யார் கொண்­டு­போ­னது ? என்ன நடந்­தது என்று எது­வுமே தெரி­ய­வில்லை.

எனினும் ஏதா­வது ஒன்றை செய்யும் நோக்கில் காணாமல் போனோர் குறித்த அலு­வ­லகம் தொடர்­பான சட்டம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அந்த அலு­வ­லகம் அமைக்­கப்­படும். அதில் நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களும் இடம்­பெறும்.

கே: நாட்டில் இன­வாத மத­வாத செயற்­பா­டுகள் தலை­தூக்­கு­வ­தாக குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றதே?

ப: நல்­லாட்சி அர­சாங்கம் இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­காது. சிங்­களம் தமிழ் முஸ்லிம் எந்த தரப்­பி­லி­ருந்து இன­வாதம் வெ ளிப்­பட்­டாலும் அதற்கு இட­ம­ளிக்­க­மாட்டோம்.

இந்த விட­யத்தில் சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். யாருக்கும் சட்டம் பொது­வா­னது. எம்மை பொறுத்­த­வ­ரையில் வடக்கில் விக்­கி­னேஸ்­வ­ரனும் சிவா­ஜி­லிங்­கமும் இன­வாதம் செய்­து­கொண்­டி­ருக்­கின்­றார்கள். அதே­போன்று தெற்­கிலும் சிலர் உள்­ளனர். ஆனால் நாம் எந்­த­வி­த­மான இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கும் இட­ம­ளியோம்.

கே: 2017 ஆம் ஆண்டில் ஆட்­சியை பிடிப்­ப­தாக மஹிந்த கூறி­யுள்­ளாரே?

ப: அவர் அதனை எவ்­வாறு செய்­கின்றார் என்று பார்ப்போம்.

கே:கிராம மட்­டத்தில் மஹிந்­த­வுக்கு ஆத­ரவு அதிகம் உள்­ள­தாக கூட்டு எதி­ரணி கூறு­கின்­றதே?

ப: யுத்­தத்தை முடித்­தவர் என்ற வகையில் நாமும் அவரை நேசிக்­கின்றோம். ஆனால் அவர் சுதந்­திரக் கட்­சியில் இருக்­க­வேண்டும். பிரிந்து சென்றால் நாம் எமது பிர­யோ­கங்­களை செய்வோம்.

கே:2015 ஆம் ஆண்டு ஏன் மஹிந்த தோற்றார்?

ப: அதற்கு பல கார­ணங்கள் உள்­ளன. ஒரு சில கார­ணங்­களை கூறு­கின்றேன். வடக்கு மாகா­ணத்­துக்கு மஹிந்த சிறந்த சேவை­யாற்­றினார். ஆனால் அம்­மக்­களின் மனங்­களை வெல்­ல­வில்லை.

அதனால் மஹிந்த என்­னதான் செய்­தாலும் தமிழ் மக்கள் தக்க சமயம் வரும்­வரை காத்­துக்­கொண்­டி­ருந்­தனர். சந்­தர்ப்பம் வந்­ததும் மஹிந்­தவை எதிர்த்து வாக்­க­ளித்­தனர். அதே­போன்று முஸ்லிம் மக்­களும் மஹிந்த எதிர்த்து வாக்­க­ளித்­தனர். அளுத்­கம சம்­ப­வத்தில் முன்­னைய அர­சாங்கம் உரிய முறையில் செயற்­ப­ட­வில்லை. இதனால் முஸ்லிம் வாக்­கு­களை இழந்தார்.

மஹிந்த அன்று 52000 பட்­ட­தா­ரி­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்­கினார். மேலும் நான் எனது கரங்­க­ளினால் அன்று 7000 பேருக்கு மோட்டார் சைக்­கிள்­களை வழங்­கினேன்.

அந்த மோட்டார் சைக்­கிள்­களில் மஹிந்­தவின் படங்கள் பொறிக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆனால் அவற்றை பெற்­ற­வர்கள் உட­ன­டி­யாக மஹிந்­தவின் படங்­களை அகற்­றினர். நான் உடனே இதனை மஹிந்­த­வுக்கு தெரி­யப்­ப­டுத்­தினேன்.

எனினும் அப்­போ­து­கூட நிலை­மையை யாரும் ஊகிக்­க­வில்லை. மேலும் சரத் பொன்­சேகா சிறையில் அடைக்­கப்­பட்­டமை பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் பாரிய அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யது. இவைதான் பிர­தான காரணங்கள். மேலும் சில காரணங்களும் காணப்பட்டன.

கே: 2009 ஆம் ஆண்டின் பின்னரான நிலைமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

ப: 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்ததும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இரண்டு பாதைகள் காணப்பட்டன. யுத்தத்தினால் தமிழ் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்தனர். தெற்கில் நாமும் 1971 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் கஷ்டப்பட்டோம்.

இந்நிலையில் வடக்கு மக்கள் 2009 ஆம் ஆண்டு கஷ்டப்பட்டார்கள். அந்த காயங்களை ஆற்ற முன்னைய அரசாங்கம் எந்தத் திட்டத்தையும் வகுக்கவில்லை. நாங்களும் அந்த அரசாங்கத்தில் இருந்தோம்.

ஆனால் காயப்பட்ட மக்களின் காயங்களை ஆற்ற முன்னைய அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. எனவே 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியானது தமிழ் மக்களின் வடுக்களை ஆற்றாத காலப்பகுதியாகவே அமைந்தது என்று கூறலாம்.

கே:நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்ன?

ப: சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படாத வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் திருத்தங்களை செய்யவேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். ஆனால் ஐக்கிய தேசிய கட்சி புதிய அரசியலமைப்பு குறித்து பேசுகின்றது. இதில் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுக்கப்படவேண்டும்.

வீரகேசரி நாளி­த­ழ்