Breaking News

9 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் – அமைச்சரவை அங்கீகாரம்!

ஒன்பது மாகாணங்க ளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகார மளித்துள்ளது.

அரசாங்கத் திணைக்க ளத்தின் கேட்போர்கூடத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மா னங்களை அறிவிக்கும் ஊடகவிய லாளர் சந்திப்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களைத் தனித்தனியாக நடத்துவதனால் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்து, 9 மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஓரே தினத்தில் நடத்துவதற்கு ஏற்ற வகையில் அரசியல் யாப்பு மற்றும் மாகாண சபைகள் சட்டத்தில் அது தொடர்பான விதப்புரைகளைத் திருத்தம் செய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் கயந்த கருணாதிலக்க மேலும் கூறினார்.