நாம் எதிர்பார்க்கும் அளவு விடயங்கள் நடக்கவில்லை – சம்பந்தன்
புதிய அரசமைப்பு விடயத்தில் அரசு சில கருமங்களைச் செய்துள்ளது. ஆனால் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு விடயங்கள் நடைபெறவில்லை.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறப்பட்டவை.
புதிய அரசமைப்பு விடயத்தில் அரசு சில கருமங்களைச் செய்துள்ளது. ஆனால் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு விடயங்கள் நடைபெறவில்லை. அரசு துரிதமாகச் செயற்படவேண்டும். இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு விரைவாக எட்டப்பட வேண்டும். கடந்த அரசு வழிமாறிச் சென்றமையினால், நாட்டில் மூவின மக்களும் ஒன்று சேர்ந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
வடக்கு – கிழக்கில் தமிழ் தமது அன்றாடப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதற்காக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் கைதிகள் விடயத்தில் நாம் கோரியது நடக்கவில்லை. காணிகள் கொஞ்சம் விடுவிக்கப்பட்டிருக்கின்றன.
காணாமற்போனோர் விவகாரத்தில் அலுவலகம் இன்னமும் அமைக்கப்படவில்லை. வடக்கு – கிழக்கில் மக்கள் நடத்தும் போராட்டங்களுக்கு மூவின மக்களும், மூவின அரசியல்வாதிகளும் கலந்து கொண்டுள்ளனர். மக்களின் போராட்டம் நியாயமானது என்பது இதனூடாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. அரசு இதனைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்த மக்களின் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்படவேண்டும் – என்றார்.