திறமை, நேரத்தை மதிப்பவர்களோடு பணிபுரிவதே பிடிக்கும்! -ஆண்ட்ரியா
எனது கலைத் திறமையையும் நேரத்தையும் மதிப்பவர்களோடு பணி புரிவதே பிடிக்கும் என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடி ப்பில் வெளியாகி இருக்கும் ‘தரமணி’. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு யுவன் இசையமைத்து ள்ளார். ஜே. சதீஷ்குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதில் ஆண்டரியாவின் நடிப்புக்கு பெரும் பாராட்டு குவிந்து வருகிறது.
இது குறித்து ஆண்ட்ரியா கூறியிருப்ப தாவது:
இயக்குனர் ராம் சாருடன் சில சந்திப்புகளிலேயே ‘தரமணி’ தொடங்கியது. ‘தரமணி’ படத்தில் எனது கதா பாத்திரம் இவ்வளவு துணிச்சலாக இருக்கும் என முதலில் நான் நினைக்க வில்லை.
மக்களின் வரவேற்பையும் கருத்துக்களையும் பார்க்கும்பொழுது, நான் எதிர்பார்த்ததை விட மிக துணிச்சலாக இந்த கதாபாத்திரம் தோன்றுகிறது. எனது சொந்த உடல் மொழியையும் யதார்த்த நடிப்பையும் வெளிப்படுத்த இயக்குனர் ராம் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.
‘தரமணி’ படத்திற்கு மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்பட்டது. எனது கலைத் திறமையையும் நேரத்தையும் மதிப்பவர்களோடு பணிபுரிவதே பிடிக்கும், ராம் சார் இவ்விரண்டு அம்சங்களையும் மிகவும் மதிப்பவர்.
ஒரு படம் பற்றிய அவரது அணுகுமுறையும் மிகவும் யதார்த்தமாக காட்சி யமைக்கும் முறையும் பிடித்திருந்தது.
நடிகர்களுக்கு எதையும் அறிவுறுத்தி திணிக்காமல் அவர்களுடன் படத்தின் கதை மற்றும் அவர்களது காட்சிகள் பற்றி ஒரு ஆரோக்கியமான விவாதம் நடத்தி படப்பிடுப்பு நடத்துவார் இயக்கு னர் ராம்.
பெண்கள் ஆண்களுக்கு எல்லாவிதத்திலும் சமம் என்பது நிரூபணமாகி வரும் காலம் இது.
ஆணை போல் ஒரு பெண்ணும் ஒரு வேலைக்கு போய், சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஆண்களை சார்ந்து வாழும் நிலை மாறி, பெண்கள் தங்களது அன்றாட தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு உயர்ந்துள்ள தால் ஆண்களின் ஈகோ பாதிக்கப்பட்டிருக்கிறது.
நான் நம்பும் எனது இந்த சொந்த கருத்துக்களால் தான் ‘தரமணி’ படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இவ்வாறு ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.








