Breaking News

ஈழத் தமிழ்ப் பெண் நைஜீரிய காதலனால் கோரமாகக் குத்திக் கொலை!


 காதலனால் கோரமாகக் குத்திக் கொலை! 

 இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் தனது காதலனால் ஜேர்மனி நாட்டில் கொடூரமாகப் படு கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நா ட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டு ள்ளன. அந்தோனி எனப்படும் நைஜீ ரிய நாட்டவரே தனது காதலியான தமிழ் பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இவர் ஜேர்மனியில் புகலிடம் கோரிய நைஜீரிய பிரஜை எனக் கூறப்படுகின்றது. இதில் 22 வயதான இலங்கையைச் சேர்ந்த மாணவியான சோபிக்கா பர்மநாதன், 28 வயதான அந்தோனி எனப்படும் நைஜீரிய நாட்டவரால் கொடூ ரமாக படுகொலை செய்யப்பட்டதாக நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள். 

இந்தச் சம்பவம் வருடத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனாலும் நேற்றைய தினமே வழக்குக்கு எடுக்கப்படிருந்தது. “Angel of Ahaus” என உள்ளூர் மொழியில் அழைக்கப்பட்ட சோபிக்கா பர்மநாதன் அகதிகளுக்கான தன்னார்வ பணியில் ஈடுபட்டு வந்தவர். 

இதற்காகவே இவர் இவ்வாறு அழைக்கப்பட்டார் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் அந்தோனியின் முழுப் பெயரை பொலிஸார் வெளியிடவில்லை. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி சோபிக்காவை அந்தோனி தாக்கியுள்ளார். 

அதன் பின்னர் சோபிக்கா அவருடனான உறவைத் துண்டித்துள்ளதாக வழக்க றிஞர் தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அந்தோனி நீண்ட கத்தி ஒன்றால் சோப்பிக்காவின் தலை, கழுத்து மற்றும் மார்பகங்களில் குத்தி கொலை செய்துள்ளார். 

22 தடவைகள் சோபிக்காவை அந்தோனி கத்தியால் குத்தியுள்ளதாக வழக்கறி ஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பின்னர் வீதியொன்றில் பெரிய சூட்கேஸுக்குள் சோபிக்காவின் சடலத்தை அந்தோனி மறைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து தப்பிச் சென்று இரண்டு நாட்களின் பின்னர் சுவிட்ஸர்லாந்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு ள்ளார். இந்த கொலை சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் தனது மகள், அந்தோனியால் அச்சுறுத்தப்பட்டதாக சோபிக்காவின் தந்தை சிவசம்போ தெரிவித்துள்ளார். 

அந்தோனியும் சோபிக்காவும் 2016 ஆம் ஆண்டு ஜேர்மனியில் உள்ள அஹோஸ் நகரில் உள்ளூர் அகதிகள் இல்லத்தில் சந்தித்துள்ளனர். சோபிக்கா அங்கு தன்னார்வ தொண்டு செய்து வந்துள்ளார். 

அங்குதான் அகதியாக அந்தோனி இருந்துள்ளார். அந்தோனி இத்தாலியிலும் மூன்று ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டில்தான் ஜேர்மனிக்குச் சென்றுள்ளார். 

தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதனால் 2012 இல் தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், நைஜீரியாவில் உள்ள பயங்கரவாத குழுவான போகோ ஹராமுக்கு எதிராக தான் போராடிய தாகவும், தனது புகலிட கோரிக்கை விண்ணப்பத்தில் அந்தோனி குறிப்பி ட்டுள்ள போதிலும் அவை போலியான தகவல்கள் என அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் அந்தோனிக்கான ஆயுள் தண்டனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி அன்று விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

சோபிக்காவின் வழக்கறிஞர் Hans-Peter Maas என்பவர் சோபிக்கா பற்றிக் குறிப்பிடும்போது, ”சோபிக்கா ஒரு சிறந்த பெண்ணாக காணப்பட்டுள்ளார். தனது பிறந்த நாள் அன்று இலங்கையில் வாழும் வீடற்ற மக்களுக்கு உதவி பொருட்கள் அனுப்பி வைத்துள்ளார்” என்றார்