காவல்துறையினருக்கு பயனளிக்கக்கூடிய வகையில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் – பிரதமர்
காவல்துறையினருக்கு பயனளிக்க க்கூடிய வகையில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டுமென பிரத மர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்து ள்ளார்.
காவல்துறை மற்றும் குற்றவியல் நீதி விசாரணை தொடர்பில் பல்கலைக்க ழகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டி யது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முப்படையினரைப் போன்று அல்லது காவல்துறையினருக்கு ஆய்வு செய்வ தற்கான சந்தர்ப்பம் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் பல்கலைக்கழக மொன்று இன்மையே இதற்கான காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களம், சட்டத்தரணிகள், சங்கத் திணைக்கள அதிகாரி கள், குடிவரவு குடியகழ்த்வுத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் இந்தப் பல்கலைக்கழகத்திற்குள் உள்வாங்கப்பட முடியுமென குறிப்பிட்டு ள்ளார்.