Breaking News

கிளிநொச்சி - பாரதிபுரத்தில் வாள்வெட்டு - 4 பேர் காயம்

கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதி மது பான நிலையத்திற்கு முன்பாக இன்று மதியம் மேற்கொள்ளப்பட்ட வாள்வெ ட்டு தாக்குதலில் காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளனர். 

கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதி மது பான நிலையத்திற்கு முன்பாக நின்ற இரு குழுக்களுக்குமிடையில் வாள் வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.  இவ் வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் மதுபோதையில் நின்ற நபர்களுக்கிடையில் வாய்த்தர்க்கத்தினால் நடை பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக எவரையும் கைது செய்ய வில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஏனெனில்

கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதி மதுபானசாலைக்கு முன்பாக இரு குழு க்களுக்கு இடையில் வாள் வெட்டு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் இராணுவ முகாமிற்குள் ஒடி மறைந்ததாகவும் அவர்களை கைது செய்யக் கோரியும் பரந்தன் சந்தியில் மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.  இத்துடன் அங்கு பதற்றமான சூழல்நிலை காணப்படுகின்றது.