Breaking News

5 ஆவது நாளா­கவும் தொடரும் அர­சியல் கைதிகளின் போராட்டம்



பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தின் கீழ் வவு­னியா நீதி­மன்றில் வைக்­கப்­பட்­டுள்ள தங்கள் மீது தொடுக்­கப்­பட்ட வழக்­கு­களை வேறு நீதிமன்­றுக்கு மாற்ற வேண்டாம் எனக்­கோரி மூன்று அர­சியல் கைதிகள் நேற்று ஐந்தாம் நாளா­கவும் தொடர்ச்­சி­யான உண்­ணா­வி­ரத போராட்­டத்­தினை மேற்­கொண்­டனர்.

இதே­வேளை அர­சியல் கைதி­களின் உண்­ணா­வி­ரத போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு துரித நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் எனத் தெரி­வித்து அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்­பினால் எதிர்­கட்சி தலைவர் இரா சம்­பந்­த­னுக்கு கடி­த­மொன்றும் அனுப்­பப்­பட்­டுள்­ளது. 

அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்­பி­னூ­டாக எதிர்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்­திற்கு நேற்று வெள்­ளிக்­கி­ழமை குறித்த கடி­தத்­தினை அனுப்பி வைத்­துள்­ள­தா­கவும் அவ்­வ­மைப்பின் இணைப்­பாளர் அருட்­தந்தை மா. சக்­திவேல் தெரி­வித்தார். 

எதிர்­கட்சி தலை­வ­ருக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

வவு­னியா நீதி­மன்றில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தங்கள் மீது தொடுக்­கப்­பட்ட வழக்­கு­களை வேறு நீதி மன்­றத்­திற்கு மாற்ற வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்தும் இது தொடர்பில் எதிர்­கட்சி தலை­வரோ அல்­லது தமிழ் தேசிய கூட்­ட­மை­பி­னரோ உரிய பதி­ல­ளிக்­க­வில்லை எனத்­தெ­ரி­வித்தும் கடந்த 25 ஆம் திகதி முதல் மூன்று அர­சியல் கைதிகள் அனு­ரா­த­புர சிறைச்­சா­லையில் தொடர்ச்­சி­யான உண்­ணா­வி­ரத போராட்­டத்­தினை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

ஏற்­க­னவே கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தொடர்ச்­சி­யாக உண்­ணா­வி­ர­தத்தை போராட்­டத்­தினை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

இது தொடர்பில் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்­பி­னூ­டாக கடந்த 25 ஆம் திகதி தங்­க­ளுக்கு கைய­ளித்­தி­ருந்த கடி­த­மொன்­றி­னு­டாக குறித்த அர­சியல் கைதி­களின் வழக்­கினை வேறு நீதி­மன்­றத்­திற்கு மாற்­று­வதால் ஏற்­படும் நடை­முறை சிக்கல் தொடர்பில் பூர­ண­மாக தெளி­வூட்­டி­யி­ருந்தோம். 

அவ்­வாறு தங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட கடி­தத்தின் மூலம் தங்­களால் உரிய தீர்வு கிடைக்­கப்­பெறும் எனும் நம்­பிக்­கையில் அர­சியல் கைதிகள் மேற்­கொண்ட தொடர்ச்­சி­யான உண்ணா விரத போராட்­டத்­தினை கடந்த மாதம்25ஆம் திகதி கைவிட்­டி­ருந்­தனர்.

எனினும் அந்த கடி­தத்­திற்கு தங்­க­ளி­ட­மி­ருந்து இது வரையில் பதில் எதுவும் கிடைக்­கப்­பெ­றாத நிலை­யிலும் அதற்­காக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­மை­யி­னாலும் அவர்­க­ளது வழக்கு விசா­ர­ணைகள் அநு­ரா­த­புரம் நீதி மன்­றிற்கு மாற்­றப்­பட்­டுள்­ளன. இதனால் குறித்த அர­சியல் கைதிகள் மீண்டும் கடந்த 25ஆம் திகதி திங்­கட்­கி­ழமை முதல் மீண்­டும்­தொ­டர்ச்­சி­யான உண்­ணா­வி­ர­தத்­தினை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். 

கடந்த 2015ஆம் ஆண்டு அனைத்து அர­சியல் கைதி­களும் தங்கள் விடு­த­லையை வலி­யு­றுத்தி சிறையில் உண்­ணா­வி­ரதம் இருந்த போது அவர்கள் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்த போதும் அவை இது வரையில் நிறை­வேற்­றப்­ப­டா­தி­ருப்­ப­தையும் தங்­களின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­கின்றோம். 

அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் தற்போது சிறையில் உண்ணாவிரம் இருக்கும்அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கும் இனியாவது ஓர் உரிய பதிலை விரைவில் எதிர்ப்பார்ப்பதாக எதிர்கட்சி தலைவருக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.