Breaking News

வித்தியா கொலையாளிகளுக்கு சிறைச்சாலையில் தாக்குதல்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் மரணதண்டனைக் கைதிகள்மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.


இந்தச் சம்பவம் தும்பறை சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரியவருவதாவது,

னேற்று முந்தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதாய விளக்க தீர்ப்பாயத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் நேற்று மாலை போகம்பர சிறைச்சாலையிலிருந்து தும்பறை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டபோதே சிறையிலிருந்த ஏனைய மரணதண்டனைக் கைதிகளால் குறித்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.