Breaking News

இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும் தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரனும்

அன்றொரு நாள் இந்தியாவின் அசோ கா ஹோட்டலில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட வேளை தலைவரிடம் கூறிப்பிட்டு ள்ளார் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி, மிஸ்டர் பிரபாகரன் நீங்கள்தான் வட க்குமாகணத்திற்கு முதலமைச்சர். அதற்கு தலைவர் பிரபாகரனுக்கு முத லமைச்சர் பதவி யாரும் வழங்க வே ண்டிய அவசியமில்லை.
எனது மக்களுக்கு பிரபாகரன் எப்பவும் முதலமைச்சர்தான் எனது மக்களுக்கு பிரபாகரன் எப்பவும் ஜனாதிபதிதான்.எனது மக்களுக்கு பிரபாகரன் எப்பவும் தலைவர்தான். அது நடந்து இற்றைக்கு 30 வருடங்கள் கடந்தாயிற்று.

இன்றுவரை தமிழர்களின் ஒரேயொரு தலைவர் என்றால் அது எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் மட்டுமே. இதேவேளை சுதுமலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட தகவல் தொடர்பாக அதன் ஒரு அங்கமான ஆயுதங்களை ஒப்படைப்பது தொடர்பாகவும் எமது மக்களுக்கு விடுதலைப்புலிகளின்  நிலை ப்பாடு பற்றியும் தலைவர் பிரகடனப்படுத்தியிருந்தார். 

முக்கியமாக எமது மக்களின் ஒரேயொரு பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்தியா எம்மிடமிருந்து பெற்றுக்கொள்வதன்மூலம் எமது மக்களின் பாதுகாப்பு என்ற பெரும்பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொள்கி றது. 

பாரதப்பிரதமரின் உத்தரவாதத்திலும் உறுதி மொழியிலும் நம்பிக்கை வைத்தே எமது ஆயுதங்களை ஒப்ப டைக்கிறோம். போராட்ட வடிவங்கள் மாறலாம்-ஆனால் போராட்ட இலட்சி யம் மாறப்போவதில்லை. 

தலைவர் அன்றே கூறிவிட்ட தீர்க்க தரிசனமான அந்த வார்த்தையை ஒவ்வொரு தமிழரும் தம்நெஞ்சங்களில் பதிவேற்றி இலட்சியத்தை நோக்கி தொடர்ந்து பயணிப்போம். 

“போராட்ட வடிவங்கள் மாறலாம்-
ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவ தில்லை” 

 “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”