Breaking News

சுவிற்சலாந்தில் பொலிசாரால் சுட்டுக்கொலையான - இளைஞர்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆன ந்தபுரத்தை வசிப்பிடமாகக் கொண்ட  இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒரு வர் நேற்று முன்தினம் சுவிற்சலா ந்தில் உள்ள அகதிகளுக்கான இடை த்தங்கல் முகாமில் பொலிசாரால் சுட்டுகொல்லப்பட்டுள்ளார். 

 புதுக்குடியிருப்பு 6 ஆம் வட்டாரம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பி ரமணியம் கரன் (வயது 38) எனப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய குடும்பஸ்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தங்கியிருந்த இடை த்தங்கல் முகாமில் சக அகதிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில்  சக அகதிகளால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து,  வந்த பொலிஸாரின் கட்டளைக்கு குறித்த நபர் கீழ்ப்படியாத நிலையில் இவர் மீது துப்பாக்கி சூட்டை பொலிஸார் நடாத்தியதில் துப்பாக்கி சூட்டினால் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார். 

 கடந்த 2015 ஆம் ஆண்டு தஞ்சம்கோரி சுவிஸ் நாட்டுக்கு சென்ற சுப்ரமணியம் கரன் கடந்த 2 வருடங்களாக சுவிஸ் நாட்டின் டிசினோ மாகாணத்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். 

இயல்பாகவே சாதரண சுபாவத்தை கொண்ட இவர் போரால் மிகவும் வன்மையான பாதிப்புக்களை எதிர்கொண்டு புதுக்குடியிருப்பில் ஆனந்தபுரம் என்னும் கிராமத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இறுதிப்போரில்  உடைமைகளையும் இழந்து உறவுகளையும் இழந்து வாழ்ந்த இவர் 2015 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டுக்கு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தஞ்சம்கோரி புகுந்துள்ளார்.  

இந்த நிலையில் நேற்று முன்தினம் சக அகதிகளுடன் ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில் சுவிஸ் நாட்டு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டி பலியாகி யுள்ளார்.   

எமது தந்தை இங்கு இருக்கும்போதும் பாரதூரமான எந்த விதமான குற்றங்களிலும் ஈடுபடாதவர் எனத் தெரிவித்த  இவரது பிள்ளைகள் சுட்டு க்கொல்லும் அளவுக்கு எமது தந்தை எந்த தவறும் இழைத்திருக்க மாட்டார் என தெரிவித்துள்ளனர். 

தமது தந்தையின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு இலங்கை அரசும் சுவிஸ் நாட்டு அரசும் உதவி புரியவேண்டும் என மன்றாட்டமாக கேட்ப தாகவும் தமது தந்தைமீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து சுவிஸ் நாட்டு அரசால் நீதியான விசாரணைகள் நடாத்தப்பட்டு தமக்குரிய பதில் கிடைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.