Breaking News

ஊடகப் பேராசான் கோபு ஐயா இயற்கை எய்தி விட்டார் ! மட்டக்களப்பில்

எஸ்.எம்.ஜி கோபு ஐயா  ஊடகத்துறை யினரால் மதிப்புடனான  ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம், (வயது-87) நேற்றை ய தினம் காலை மட்டக்களப்பில் இய ற்கை எய்தி விட்டார். கடந்த சில நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த எஸ்.எம்.ஜி அவர்கள் நேற்று காலை 9.30 மணியளவில், மட்டக்களப்பு, பூம்புகாரில் உள்ள அவரது இல்ல த்தில் காலமாகி விட்டார். 1930ஆம் ஆண்டு ஒக்டோபர் 03ஆம் திகதி பிறந்த எஸ்.எம்.ஜி, கொழும்பில் வீரகேசரி நாளிதழில், ஒப்பு நோக்குநராக ஊடகத் துறைக்குள் காலடி எடுத்து தடம் பதித்தவர். 

ஏழு ஆண்டுகள் பணியில் கடமையாற்றிய பின்னர், யாழ்ப்பாணத்தில் ஈழநாடு நாளிதழில் பணியாற்றத் தொடங்கினார். ஈழநாடு நாளிதழின் செய்தி ஆசிரி யராகவும் ஆசிரியராகவும் பணியாற்றிய அவர், பின் ஈழமுரசு, ஈழநாதம் ஆகிய நாளிதழ்களின் ஆசிரியராகவும் செயற்பட்ட காலமது. 

ஊர்சுற்றி, கோபு, எஸ்.எம்.ஜி, செந்தூரன், போன்ற பல புனை பெயர்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதிக் குவித்தவர். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த நமது ஈழநாடு நாளிதழின் ஆசிரியபீட கௌரவ ஆலோசகராகவும், இவர் பணியாற்றியிருந்தார். 

ஈழமுரசு ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில், இந்தியப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த போது, எழுதிய எஸ்.எம். ஜி இன் சிறைக்குறிப்புகள், தமிழ்நாட்டில் ஜூனியர் விகடன் இதழில் ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை’ என்ற தலைப்பில் தொடராக வெளியாகி பெரும் பரபரப்பா னது என்பது குறிப்பிடத்தக்கது. 

பின்னர், அதனை தொகுத்து ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை’ எனும் நூலாக பிரசுரித்தார். ‘ஈழம்  முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு’ நூலையும் எஸ்.எம்.ஜி எழுதி வெளியிட்டுள்ளார். 

ஈழ ஊடகத்துறையில் அனுபவம் மிகு ந்த பேராசானாக விளங்கிய எஸ்.எம். கோபாலரத்தினம் அவர்கள், 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன், அவர்க ளால் 2004ஆம் ஆண்டு ஜூன் 04ஆம் திகதி விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார் என்பது நினைவுகூர வேண்டிய சந்தர்ப்பமாக இவ்வே ளை அமைந்துள்ளது. 

இயற்கை எய்திய ஊடக ஆசான் பேராசான் கோபு ஐயா அவர்களுக்கு எமது இணையம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.