Breaking News

வீழ்ந்தது தமிழரசுக் கட்சி எழுந்தது ஜனநாயக தமிழரசு!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முனைப்புக்கள் தீவிரம் அடைந்துள்ள  நிலையில் தமிழரசுக்கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்களாக விளங்கிய ஒரு குழுவினர் ஜனநாயக தமிழரசுக்கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றுக்கு தயாராகி யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
தமிழரசுக்கட்சியின் முன்னாள் இளை ஞர் அணித் தலைவர் வி.எஸ். சிவக ரனது ஏற்பாட்டில் தமிழரசு க்கட்சி யின் மூத்த உறுப்பினர்கள் பேராசிரி யர் சி.க. சிற்றம்பலம், மறவன்புலவு சச்சதிதானந்தம் மற்றும் மகளிர் விவ கார அமைச்சர் அனந்தி சசிதரன் உட்ப ட்டவர்கள் உள்ளடங்கலாக குறித்த கட்சி தேர்தலை எதிர்கொள்ள நடவடி க்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் சின்னமாக மேல்வீட்டைத் தெரிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கிடை க்கப்பெற்றுள்ளன. இதனிடையே ஜனநாயக தமிழரசுக்கட்சிக்கு ஆட்களை இணைக்கும் நடவடிக்கையில் அவர்கள் தீவிரம் காட்டிச் செயற்பட்டு வருதா கவும் தெரிவிக்கப்படுகின்றது.   

இக் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் தென்ம ராட்சி அமைப்பாளர் கந்தையா அருந்தவபாலன் அவர்கள் கடைசி நேரத்தில் பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழரசுக்கட்சியின் தலைமைப்பீடத்துக்கும் அருந்தவபாலன் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இரகசிய உடன்படிக்கையின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அருந்தவபாலன் அவ ர்கள் விரைவில் பதவியேற்பார் என நம்பப்படுகிறது. 

அதற்குப் பிரதி பலனாக உள்ளுராட்சித் தேர்தலில் கேசவன் சயந்தனின் நடவடிக்கைகளில் தலையிடாமல் அவருக்கு ஒத்துழைப்புக் கொடுக்கவும் ஆபிரகாம் சுமந்திரன் போன்றவர்களின் கொள்கை முடிவுகளை விமர்சிக்கா மல் அமைதிகாப்பதற்கும் அருந்தவபாலன் அவர்கள் இணங்கியுள்ளதாக உள்வீட்டுத் தகவல்கள் கசிந்துள்ளன. 

இதற்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெற்றிருந்த சுரேஷ் பிறேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கட்சி வெளியேறி, ஏற்க னவே வெளியேறியுள்ள தமிழ் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர்வதாக அறி விப்பு விடுத்துள்ளது.  

இருப்பினும் ஈபிஆர்எல்எப் வரதர் அணியினரை கூட்டமைப்பின் உள்ளே கொண்டு வருவதற்கான முயற்சியும் தமிழரசுக் கட்சியினரால் திரைமறை வில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகியிரு ந்தமை தெரிவிக்கப்படுகின்றது.

-லீடர்-