வடக்கு முதலமைச்சரின் செல்வாக்குக்கு அஞ்சுபவா்களே அவரை விமர்சிப்பதாக - பொ.ஐங்கரநேசன்
வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னே ஸ்வரன் ஓர் அரசியல்வாதியாகத் தோற்று விட்டார் எனக் கூறுபவர்கள் முதலமைச்சரின் மக்கள் செல்வாக்கு க்கு அஞ்சியே அவ்வாறு விமர்சித்து வருகின்றனர் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் மத்திய அமைச்சருமான டிலான் பெரேரா, முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிறந்த நீதியரசராக இருந்தபோதும் அரசி யல்வாதியாகத் தோற்றுவிட்டதாக அண்மையில் தெரிவித்திருக்கும் கருத்து க்கு பதிலளிக்கும் விதமாக, பொ.ஐங்கரநேசன் ஊடக அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார்.
சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் மத்திய அமைச்சருமான டிலான் பெரேரா, முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிறந்த நீதியரசராக இருந்தபோதும் அரசி யல்வாதியாகத் தோற்றுவிட்டதாக அண்மையில் தெரிவித்திருக்கும் கருத்து க்கு பதிலளிக்கும் விதமாக, பொ.ஐங்கரநேசன் ஊடக அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார்.
அவ் அறிக்கை பின்வருமாறு.....
வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஓர் அரசியல்வாதியாகத் தோல்வியடைந்து விட்டார் எனவும், மத்திய அரசு வழங்கும் நிதியையே சரி யாகப் பயன்படுத்தத் தெரியாத முதலமைச்சர் மலேசியா வழங்கும் நிதியை என்ன செய்வார் என புரியவில்லையெனவும் கேலியும் கிண்டலும் தொனி க்கச் சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமா னடிலான் பெரோ பேசியிருக்கின்றார்.
அவர் மட்டு மல்ல, சிங்களத் தரப்பு அரசியல்வாதிகள் பலரும் தமிழ் அரசி யல்வாதிகள் சிலரும் முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபை யையும் விமர்சிக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
முதலமைச்சர் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சும் அரசியல்வாதிகளே, மக்கள் மனங்களில் இருந்து அவரைக் கீழிறக்கும் உள்நோக்கில் இவ்வாறு தவறாக விமர்சித்து வருகின்றனர்.
விக்னேஸ்வரன் அவர்கள் நீண்டகாலமாகத் தென்னிலங்கையில் வாழ்ந்தவர் என்பதாலும், சிங்களத்தரப்புடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தமை யாலும் அவரைத் தமது விருப்புகளுக்கு ஏற்ப கையாளலாம் என்பதே சிங்களத் தலைமைகளினதும் அவரை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கியவ ர்களினதும் எண்ணவோட்டமாக இருந்தது.
ஆனால்,இவர்களது எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக முதலமைச்சரின் செயற்பாடுகள் அமைந்தன.தமிழ் மக்களின் அரசியல் வேணவாவையும் போரில் அவர்கள்பட்ட ஆற்றொணாத் துயரங்களையும் நேரில் கண்டுணர்ந்த முதலமைச்சர் அவர்கள், அவற்றுக்கான நிரந்தரத்தீர்வு வேண்டி உள்நாட்டி லும் சர்வதேச அரங்கிலும் குரல் எழுப்ப ஆரம்பித்தார்.
தங்களின் குரலாவே முதலமைச்சர் இருப்பதை உணர்ந்த மக்களிடையே அவர் மீதான பற்றும் செல்வாக்கும் உயர்ந்தது. முதலமைச்சர் அவர்களுக்கு ஏற்பட்டு வருகின்ற செல்வாக்கு, எங்கே மீண்டும் தமிழ்த்தேசியம் பலம்பெற்று விடுமோ என்ற அச்சத்தைப் பேரினவாதச் சிங்கள அரசியல் தலைமைகளிடை யேயும், எங்கே தங்களுடைய இருப்பு பறி போய்விடுமோ என்ற அச்சத்தைச் சில தமிழ் அரசியல்வாதிகளிடையேயும் ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் அவர்களின் மக்கள் பேராதரவுப் பலத்துக்குஅஞ்சுகின்ற இவ ர்கள் கூட்டிணைந்து முதலமைச்சர் அவர்களைப் பதவி கவிழ்க்கும் திரை மறைவுச் சதியில் ஈடுபட்டனர்.
அமைச்சர்கள் மீதான உண்மைக்குப் புறம்பான ஊழற் குற்றச்சாட்டுகளும் அவ ர்களது பதவி விலகல்களும்,அதைத் தொடர்ந்து ஆளுநர் அவர்களிடம் முதல மைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக் கையளிப்பும் இச்சதியின் சில கட்டங்களே.
முதலமைச்சர் பதவி கவிழ்க்க இயலாத நிலையில், இந்தத் தரப்பினரே தற்போது முதலமைச்சர் அரசியலில் தோற்று விட்டதாகப் பரப்புரை செய்ய ஆரம்பித்துள்ளனர். அதிகாரங்கள் எதுவும் இல்லாத, சுயமாகச் செயற்பட முடி யாத மாகாணசபை முறைமையிலுள்ள குறைபாடுகளை முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தனிப்பட்ட குறைபாடுகளாகச் சித்திரித்துக்காட்டி மக்கள் மன ங்களிலிருந்து அவரை கவிழ்க்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர்.
இத்தகைய பரப்புரைகளின் பின்னாலுள்ள தமிழ்த் தேசிய எதிர்ப்பு அரசியலை த்தமிழ் மக்கள் நன்றாகவே புரிந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டு ள்ளது.