Breaking News

வார்த்தைகளை பயின்ற கொரில்லா குரங்கு!

அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவி லுள்ள   மிருகக்காட்சி சாலையில் கட ந்த 1971ஆம் ஆண்டு ஜாக்குலின் என்ற கொரில்லா குரங்கிற்கு பிரசவம் நட ந்தது. பிரசவத்தில் ஜாக்குலினுக்கு பெண் கொரில்லா பிறந்தது. 

ஆனால் 6 மாதம் ஆனதும் ஜாக்குலின் கொரில்லா தனது குட்டியை ஏற்றுக் கொள்ள மறுத்தது. இதற்கிடையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உளவியல் படித்துக் கொண்டிருந்த பென்னி என்ற மாணவிக்கு அந்த ஆண்டு க்கான செயல்திட்ட தலைப்பானது "மனித மிருக உரையாடல்" என அமைய ப்பெற்றிருந்தது.

இந்நிலையில் மிருகக்காட்சி சாலை க்கு சென்ற மாணவி ஜாக்குலினால் ஒதுக்கப்பட்ட பெண் கொரில்லா குட்டியை தருமாறு கேட்டு அந்த கொரில்லா குட்டியை தனது வீட்டி ற்கு அழைத்துச்சென்று குட்டி கொரி ல்லாவிற்கு கோகோ எனப் பெயரி ட்டார். உலகின் ஆகச்சிறந்த உறவு அந்த நொடி முதல் பென்னிக்கும் கோகோவுக்கும் இடையில் ஆரம்ப மாகியது. 

நான்கு ஆண்டுகளுக்குள் மிருகங்களோடு பேசுவது என்ற ஆராய்ச்சியை முடி த்து விடலாமென பென்னி நினைத்திருந்த நிலையில் இன்றும் கோகோவுட னான அவரின் உறவு தொடர்கிறது. 

இன்று கோகோ சைகை மொழியில் மனிதர்களோடு உரையாடுகிறாள் ஆங்கி லத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை அவளால் புரிந்துகொள்ள முடியும். 

 இது குறித்து பென்னி தெரிவிக்கையில்.....- 

இந்த உறவு உலகின் பார்வைக்கு எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது குறித்து எனக்கு கவலை இல்லை. எனக்கும் கோகோவுக்குமான அன்பும், உறவும் எங்களுக்கு மட்டும் தான் புரியும். கோகோ ஒரு அற்புதமான மற்றும் அழகான தேவதை என வர்ணித்துள்ளார்.