Breaking News

தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடத் தயார் - 2018 !

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுத லைப்புலிகள் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியுடன் இணைந்து வெருகல் பிரதேசத்தில் போட்டியிட வுள்ளதாக கட்சியின் தலைவர் கந்த சாமி இன்பராசா விவரித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக நேற்றைய தினம் (15) வெருகல் பிரதேச சபைக்குட்டபட்ட மக்களுக்கான தெளிவூட்டல் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கையில் மேலும் நாம் முப்பது வருட கால போராட்டத்தின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்ப ட்டு ஜனநாயக ரீதியில் அரசியலுக்குள் நுழைந்து தற்போது மக்கள் மத்தியில் அரசியல் பணிகளில் செயற்பட தீர்மானம் எடுத்துள்ளோம். 

தற்போது நிலவும் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் ஆத ரவு அற்ற நிலையில் தனக்கு என்று ஒரு நிரந்தர அரசியல் பலத்தையும் கொள்கைகளையும் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் திருமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக தயாராகியுள்ளோம். 

அதன் பிரகாரம் தமிழர் விடுதலை கூட்டமைப்பின் தலைவர் ஆனந்த சங்கரியி டம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து தற்போது களமிறங்கியுள்ளோம். இத்தனை காலமாக போராளிகள் விடுதலை ப்புலிகள் என நாம் மக்களுக்காகவே போராடினோம் மீண்டும் அவர்கள் மத்தி யிலேயே அரசியல் களத்தில் இறங்கிச் செயற்படத் தயாராகியுள்ளோம். 

எனவே எனது வேட்பாளர்களையும் கட்சியின் செயற்பாடுகளுக்கும் ஆதரவு நல்குமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின் போது வெருகல் பிரதேசத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அறிமுகம் செய்து கொண்டனர்