Breaking News

"உள்ளூராட்சி மன்ற பங்கீடு எங்களினுள் இருந்த பிரச்சினை எமது குடும்ப பிரச்சினை" : சாள்ஸ் நிர்மலநான்

"தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் உள்ளூராட்சி மன்ற பங்கீடு தொடர்பாக எங்க ளினுள் இருந்த பிரச்சினை எமது குடும்ப பிரச்சினை.

நாங்கள் தற்போது எமது குடும்பப் பிர ச்சினையை தீர்த்து விட்டோம். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னாரில் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் வெற்றி பெறும்" என தமிழ் தேசியக்கூட்ட மைப்பின் வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநான் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியி டுவதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பாக இலங்கை தமிழரசுக்கட்சி இன்று மாலை 2.30 மணியளவில் மன்னார் தேர்தல் திணைக்களத்தில் கட்டு ப்பணத்தை செலுத்தியுள்ளது. 

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட முகவராக நியமிக்கப்பட்டு ள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.