Breaking News

10 நாட்­க­ளாக படுக்­கையில் இருக்கும் நான் எப்படி அரச தரப்­புடன் பேச முடியும்?

நான் கடந்த 10 தினங்­க­ளாக சுக­வீ­ன­ம் காரணமாக படுக்­கையில் இருக்கும்  இந்­நி­லையில் எவ்­வாறு நான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தி த்து அர­சாங்­கத்­துடன் இணை­வது குறி த்து பேச்­சு­வார்த்தை நடத்த முடியு மெனக் கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­ய ஸ்­தரும் கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல கேள்வி எழுப்­பியுள்ளார். மூழ்­கிக்­கொண்­டி­ருக்கும் கப்­பலில் யா ரும் ஏற­மாட்­டார்கள். அதே­போன்று மக்­களின் செல்­வாக்கை இழந்­து ­கொண்­டி­ருக்கும் இந்த அர­சாங்­கத்­துடன் நான் இணைந்­து ­கொள்­ள­மாட்டேன் என கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல தெரிவித்துள்ளார்.

கூட்டு எதி­ர­ணியை பிர­தி ­நி­தித்­துவம் செய்யும் கண்­டி­மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அர­சாங்­கத்தில் இணைந்து ஊட­கத்­துறை இரா­ஜாங்க அமைச்சுப் பத­வியை பெற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தாக வெளி­வரும் தக­வல்கள் குறித்து வின­வி­ய­போதே அவர் இவ் விட­யங்­களை தெரிவித்தார். 

 இது­தொ­டர்பில் கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல  தெரிவிக்கையில்.....

நான் அர­சாங்­கத்தில் இணைந்து அமைச்சுப் பத­வியை பெற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தாக ஊட­கங்கள் செய்தி தெரிவித்துள்ளன ஆனால் அவ்­வாறு நான் இணைந்­து­கொள்ள போவ­தில்லை. மேலும் நான் ஜனா­தி­ப­தியை சந்­திக்­க­ இ­ருந்­த­தா­கவும் தகவல் வெளியாகின.  

 நான் கடந்த 10 நாட்­க­ளாக சுக­வீ­ன­முற்று படுத்த படுக்­கையில் உள்ளேன் இன்­றுதான் ( நேற்று) சற்று குண­ம­டைந்து தேர்தல் பணி­களில் ஈடு­பட ஆரம்­பித்­தி­ருக்­கின்றேன். இந்­நி­லையில் கடந்த 10 நாட்­க­ளாக படுக்­கையில் இருந்த நான் அரச தரப்­புடன் இணை­வது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்த முடியும். 

அது­மட்­டு­மல்லாது எந்­த­வொரு மனி­தனும் மூழ்­கிக்­கொண்­டி­ருக்­கின்ற கப்­ப லில் ஏறப்­போ­வ­தில்லை. அதே­போன்று மூழ்­கி­க்­கொண்­டி­ருக்­கின்ற கப்­பல்­போன்று காட்­சி­ய­ளிக்­கின்ற அர­சாங்­கத்தில் இணைந்­து­கொள்ளும் எண்ணம் எனக்­கில்லை இதை நான் மிகவும் ஆணித்தரமாகத் தெரி­வித்­துக்­கொள்­கி ன்றேன். 

அர­சாங்கம் நாளுக்கு நாள் மக்­களின் செல்­வாக்கை இழந்து வரு­கின்­றது. கட ந்த தேர்தல் காலத்தில் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­திகள் நிறைவேற்றப்பட வில்லை. எனவே அரசாங்கம் தொடர்பில் மக்கள் பாரிய அதிருப்தியுடன் உள்ளனர். 

அச் செயற்பாட்டினால் தான் நாங்கள் தேர்தலில் ஈடுபடுகின்றோம். எனவே அவ்வாறன நிலையில் நான் அரசாங்கத்தில் இணைந்துகொள்வேனா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.