Breaking News

தமிழரசுக்கட்சிக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் பகீர்வு !

தமிழ் அர­சுக் கட்சி விட்­டுக்­கொ­டுத்து தமிழ்த் தே­சி­யக்­கூட்­ட­மைப்­பின் ஒற்­று­மைக்கு முன்மாதிரியாகச் செய ற்பட வேண்­டும். அவ்­வாறு செயற்ப டத் தவ­று­ம் பட்சத்தில் எதிர்­கா­லத்­தில் ஏற்­ப­டும் தமிழ் மக்­க­ளுக்­கான அர ­சி­யல் ­தீர்­வின் பின்­ன­டை­வுக்கு அந்­தக் கட்­சியே பொறுப்­பாக அமை­யு மென வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் ஆ.புவ­னேஸ்­வ­ரன் விவரித்துள்ளார். முல்­லைத்­தீவு குர­வில் தமிழ் வித்தி யா­ல­யத்­தில் மாண­வர்­கள் மதிப்­ப­ளிக்­கும் நிகழ்வு பாட­சாலை மண்­ட­பத்­தில் நடைபெற்றபொழுது முதன்மை விருந்­தின­ரா­கக் கலந்து கருத்துரையாற்று கையில் இவ்வாறு உரைத்துள்ளார். மேலும் தெரி­விக்கையில் வடக்­கில் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் நடை­பெற இருக்­கின்ற நிலை­யில் சல­ச­லப்பு ஒன்று ஏற்­பட்­டுள்­ளது. மக்­கள் அந்த சல­ச­லப்­புக்­க­ளுக்­குள் அகப்­பட்­டுக்­ கொள்­ள­வேண்­டிய தேவை­யில்லை. தீர்க்க தரிசனமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். 

நாங்­கள் எவ்­வாறு செயற்­ப­ட­வேண்­டும் யாருக்­கா­கச் செயற்­ப­ட­வேண்­டும் என்று தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பில் பிளவு நிலை ஒன்று தோற்­றம் பெற்­றுள்­ளது. புதுக்­கு­டி­யி­ருப்பு, முல்­லைத்­தீ­வுப் பிர­தே­சங்­க­ளில் தமிழ் அர­சுக் கட்சி எந்­த­வொரு விட்­டுக் கொ­டுப்­புக்­கும் தயா­ராக இல்­லா­மையே பிளவு ஏற்­ப­டு­வ­த ற்குக் கார­ணம். 

தமிழ் அர­சுக் கட்சி அர­சி­யல் ரீதி­யில் மக்­க­ளுக்கு எந்தளவு பங்­க­ளிப்பு செய்­தி­ருந்­தார்­களோ அதே­ய­ளவு பங்­க­ளிப்பு ஏனை­ய­வர்­க­ளும் செய்­தி­ருக்­கின்­றார்­கள். நாங்­கள் எல்­லோ­ரும் ஒற்­று­மை­யா­கச் செயற்­ப­டு­கின்ற பொழு­து­தான் எதிர்­கா­லத்­தில் சிங்­க­ள­ தே­சம் தரும் தீர்வை சரி­யா­ன­தா­கப் பெற்­றுக்­கொள்­ள­மு­டி­யும், தமிழ் கட்­சி­க­ளின் இப்பிளவு தமி­ழர்­க­ளின் தீர்வு விட­யத்தை இன்­னும் நீண்­ட­கா­லம் இழுத்­த­டிக்க உத­­வும்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஆச­னப்­பங்­கீடு தொடர்­பில் ஒரு பேச்­சு­வார்த்தை நடந்­த­போது தமி­ழ­ர­சுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்­சி­கள் கரை­து­றைப்­பற்று, புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச சபை­க­ளில் ஏதா­வது ஒன்றைத் தாருங்­கள் என்று கேட்­டன. ஆனால் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் இரண்டு இட­மும் தமிழ் அர­சுக் கட்­சி­யி­னர் கேட்­பதாக தெரிவித்தார்.  

இவ் விட­யத்­தில் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் பொறுப்­பாக நடந்­து­ கொள்­ள­வில்லை. அத­னால்­தான் இவ் நிலைமை தோற்றமடைந்துள்ளதாக விளக்கி யுள்ளார்.