தமிழரசுக்கட்சிக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் பகீர்வு !
தமிழ் அரசுக் கட்சி விட்டுக்கொடுத்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு முன்மாதிரியாகச் செய ற்பட வேண்டும். அவ்வாறு செயற்ப டத் தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஏற்படும் தமிழ் மக்களுக்கான அர சியல் தீர்வின் பின்னடைவுக்கு அந்தக் கட்சியே பொறுப்பாக அமையு மென வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் விவரித்துள்ளார். முல்லைத்தீவு குரவில் தமிழ் வித்தி யாலயத்தில் மாணவர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றபொழுது முதன்மை விருந்தினராகக் கலந்து கருத்துரையாற்று கையில் இவ்வாறு உரைத்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் சலசலப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. மக்கள் அந்த சலசலப்புக்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளவேண்டிய தேவையில்லை. தீர்க்க தரிசனமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
நாங்கள் எவ்வாறு செயற்படவேண்டும் யாருக்காகச் செயற்படவேண்டும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பில் பிளவு நிலை ஒன்று தோற்றம் பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவுப் பிரதேசங்களில் தமிழ் அரசுக் கட்சி எந்தவொரு விட்டுக் கொடுப்புக்கும் தயாராக இல்லாமையே பிளவு ஏற்படுவத ற்குக் காரணம்.
தமிழ் அரசுக் கட்சி அரசியல் ரீதியில் மக்களுக்கு எந்தளவு பங்களிப்பு செய்திருந்தார்களோ அதேயளவு பங்களிப்பு ஏனையவர்களும் செய்திருக்கின்றார்கள்.
நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகச் செயற்படுகின்ற பொழுதுதான் எதிர்காலத்தில் சிங்கள தேசம் தரும் தீர்வை சரியானதாகப் பெற்றுக்கொள்ளமுடியும், தமிழ் கட்சிகளின் இப்பிளவு தமிழர்களின் தீர்வு விடயத்தை இன்னும் நீண்டகாலம் இழுத்தடிக்க உதவும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆசனப்பங்கீடு தொடர்பில் ஒரு பேச்சுவார்த்தை நடந்தபோது தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளில் ஏதாவது ஒன்றைத் தாருங்கள் என்று கேட்டன.
ஆனால் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் இரண்டு இடமும் தமிழ் அரசுக் கட்சியினர் கேட்பதாக தெரிவித்தார்.
இவ் விடயத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை. அதனால்தான் இவ் நிலைமை தோற்றமடைந்துள்ளதாக விளக்கி யுள்ளார்.







