Breaking News

மக்களின் பெயரால் இராணுவம் அறிக்கை வரைந்ததால் கேப்பாபுலவு மக்கள் விசனம்!

முல்லைத்தீவு மாவட்டம் கேப்­பா­பு­ல­வில் இரா­ணு­வத்­தின் வச­முள்ள எஞ்­சிய காணி­களை விடு­விக்க வேண்­டுமெனக் கோரி மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் மேல­திக செய­லரி­டம் கைய­ளிக்­கக் சென்ற மனு இரா­ணு­வத்­தால் மறுக்கப்ப ட்டுள்ளது. 

அதற்­குப் பதி­லாக அப­க­ரிக்­கப்­பட்ட காணி­க­ளுக்கு மாற்­றுக் காணி­களை அல்­லது அவற்­றுக்­கான நட்­ட­ஈடு கோரும் மனுவே மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் மேல­திக செய­ல­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டதாக கேப்­பா­பி­லவு மக்­கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

நட்­ட­ஈடு கோரி கைய­ளிக்­கப்­பட்ட மனு­வுக்­கும் தமக்­கும் எந்­தத் தொடர்­பும் இல்லையென மேலும் தெரிவித்துள்ள நிலையில் இரா­ணு­வம் கைய­கப்­ப­டுத்­தி­யி­ருந்த 133.34 ஏக்­கர் காணி நேற்று இரா ­ணு­வத்­தால் விடு­விக்­கப்பட்டது. 

அவற்­றில் 111.5 ஏக்­கார் காணி­கள் கேப்­பா­பி­லவு மக்­க­ளுக்­குச் சொந்­த­மா­னவை. இன்­னும் 285.5 ஏக்­கர் காணி­கள் இரா­ணு­வத்­தின் வசமே உள்­ளன. அவற்றை விடு­விக்குமாறு வலி­யு­றுத்தி நேற்று மக்­கள் மனு ஒன்­றைக் கைய­ளிக்க முய ற்­சித்­த­னர். காணி கைய­ளிப்பு நிகழ்வு நடை­பெற்ற இடத்­துக்கு மனு­வு­டன் சென்ற மக்களை இரா­ணு­வத்­தால் தடுக்­கப்­பட்டு மனுக்கொண்டு சென்­ற­வர் அந்த இடத்­திலிருந்து வெளி­யேற்­றப்­பட்­டதாக மக்­கள் தெரிவித்துள்ளனர்.
மக்­க­ளின் மனு­வுக்­குப் பதி­லாக இரா­ணு­வம்  தயாரித்த மனுவை  மீள்­கு­டி­யே ற்ற அமைச்­சின் மேல­திக செய­ல­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   

அதில் கேப்­பா­ப்பி­ல­வில் விடு­விக்­கப்­ப­டா­துள்ள காணி­க­ளுக்கு மாற்­றுக் காணி­கள் தாருங்­கள். அல்­லது நட்­ட­ஈடு தாருங்­கள் எனக் கோரப்பட்டுள்ள அந்த மனு­வில் சுமார் 15 பேரின் கையெ­ழுத்­துக்­கள் உள்­ளன என மக்களால் தெரிவி க்கப்பட்டுள்ளது.   

“இச் சம்­ப­வம் உண்மை. அது மறைக்­கப்­ப­டக் கூடாது. இரா­ணு­வம் கைய­ளித்­துள்ள மனு­வில் காணப்­ப­டும் கையொப்­பங்­க­ளுக்கு உரிந்­து­டை­ய­வர்­க­ளி­டம் விசா­ரித்­தேன். காணி­க­ளுக்கு நட்­ட­ஈடு தரு­மாறு ஒரு­போ­தும் கோர­வில்லை என அவர்­கள் கூறி­னார்­கள். 

இது தொடர்­பில் அவர்­க­ளி­டம் கடி­த­மும் பெற்­றுள்­ளேன். இது திட்­ட­மிட்டே செய்­யப்­பட்­டுள்­ளது.”- என்று கூறி­னார் கேப்­பா­பி­லவு காணி மீட்­புப் போராட்­டத்தை முன்­ன­கர்த்­திச் செல்­லும் ஆறு­மு­கம் வேலா­யு­த­பிள்ளை.