Breaking News

விபத்தில் இளம் பெண் பலி - மட்டக்களப்பு

களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் அவசர சிகி ச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்ப பெண் சிகிச்சை பலனி ன்றி உயிரழந்துள்ளார். 

மட்டக்களப்பிலிருந்து கல்முனையை நோக்கிச் சென்று கொண்டிருந்த காரா னது வீதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த குறித்த பெண்ணுடன் மோதியதில் தலையில் பலத்த காய ங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலை யில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் களுவாஞ்சி க்குடியைச் சேர்ந்த 28 வயதான புவிராசா நிலாந்தினி என்ற இளம்பெண்ணா வார். குறித்த விபத்திற்கு காரணமான கார் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடு த்து வருகின்றனர்.