Breaking News

அமைப்புக்களுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை !

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழ்த் தேசியமக்கள் முன்னணி தமிழர் சம உரிமை இயக்கம் மற்றும் பொது அமைப்புக்களுக்கும் இடையிலான புரி ந்துணர்வு உடன்படிக்கை 

 முகவுரை

 தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்ப ட்ட அநீதிகளுக்கு நீதி காண்பதையும் இலக்காகக் கொண்டு தமிழ் மக்கள் பேர வையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக் கொள்கை யாக முன்னிறுத்தி மேற்குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து இதய சுத்தியுடன் செயற்படும் ஓர் அரசியற் பேரியக்கமாக இவ் அமைப்பு உருவா க்கப்பட்டுள்ளது.


1. பெயர் : தமிழ்த் தேசியப் பேரவை -த.தே.பே. .(TamilNational Council–T.N.C.)

2. இலக்கு: மேற்குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேர வையினால் 10.04.2016 ஆந் திகதிவெளியிடப்பட்ட தீர்வுத்திட்டத்தை வென்றெ டுப்பதையும், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முழு மையான நீதியைபெற்றுக் கொள்வதையும் இலக்காக கொண்டு இவ் அரசியற் பேரியக்கம் (தமிழ்த்தேசியப் பேரவை) செயற்படும்.

3. எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பொதுச்சின்னத்தை பெறமுடி யாத நிலை ஏற்பட்டுள்ளமையினால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும்.  

4. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியப் பேரவை (TamilNational Council–T.N.C.) எனும் பெயரில் இக்கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டு புதிய சின்னம் பெறப்பட்டு மேற்படி இலக்கை அடைவதற்காக செயற்படும். 

5. இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பொதுஅமைப்புக்கள் தமது சுயா தீனத்தை பேணிக்கொள்ளமுடியும். மேற்படிவிடயங்களை வாசித்து விள ங்கி க்கொண்டு அதனை ஏற்று 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06ஆம் நாள் (06.12.2017) இப்புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்குறிப்பிட்ட அமைப்புக்களால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.