காணி விவகார விடயத்தில் சுவாமிநாதனுடன் ஸ்ரீதரன் முறுகல் ! (காணொளி)
முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் இரணைதீவு பகுதியிலுள்ள மக்களின் காணி விவகாரம் தொடர்பில் இராணுவத்துனட கலந்துரையாடி தீர்வு வழங்கு வதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உறுதியளித்துள்ளார்.
இவ் வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் இவ்விரண்டு பகுதிகளிலும் இரா ணுவம் வசமிருக்கும் மக்கள் காணி களை விடுவிப்பதாக ஏற்கனவே வாக்குறுதி வழங்கியிருந்த நிலை யில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் இன்றைய தினமும் அதே வாக்குறுதியை தெரிவி த்துள்ளார். மீள்குடியேற்ற அமைச்சு மீதான குழுநிலை விவாதம் ஸ்ரீலங்கா நாடாளுமன்ற த்தில் இன்றைய தினம் நடைபெற்று வருகின்றது.
இந்த விவா தத்தில் கலந்து கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு ப்பினர் எஸ் ஸ்ரீதரன், கேப்பாபுலவு மற்றும் இரணைதீவு மக்களின் காணிகள் எப்போது விடுவிக்கப்படும் என்பதை மீள்குடியேற்ற அமைச்சரிடம் கேள்வி யாக தொடுத்துள்ளார்.
இவ்வேளை அமைச்சர் சுவாமிநாதனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதர னுக்கும் இடையில் மிடுக்கான விவாதம் மூண்டது.