Breaking News

முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறுப்பினர்களை இணைத்து வடக்கில் புதிய கட்சி!

முன்னாள் போராளிகள், மாவீரர்களின் குடும்ப உறவினர்களை உள்ளடக்கிய தாக வடக்கில் மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் தலைமையில் புதிய கட்சியொன்று ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னாள் போராளிகள், மாவீரர்க ளின் குடும்ப உறவினர்களை உள்ளட க்கியதாக அந்த கட்சி அமைக்கப்பட்ட பின்னர் உறுப்பினர்களின் கருத்துக ளின் பிரகாரம், எதிர்வரும் உள்ளு ராட்சி மன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. 

அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இக் கட்சி உருவாக்கம் தேர்த லில் மாற்றத்தை ஏற்படுத்துமெனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.