Breaking News

பிரதமரின் கோரிக்கைக்கிணங்க பாராளுமன்றம் கூடவுள்ளது - சபாநாயகர்

பிரதமரின் வேண்டு கோளுக்கிணங்க பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளை 14 இன் பிரகாரம் நாளை மறுநாள் புதன்கிழமை அவசர பாராளுமன்ற அமர்வை நடத்த சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாய கர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்திரு ந்த நிலையில் இன்று இந்தத் தீர்மா னம் எடுக்கப்பட்டது. பிணைமுறி தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற த்தைக் கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த நிலையில் நாளை மறுநாள் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விசேட பாராளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது.