Breaking News

பிரிவுபடாத நாட்டிற்குள் தீர்வொன்றை காண விரும்புவதாக - சம்பந்தன்

வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஒருமித்த, பிரிக்க முடியாத, பிரிவு படாத நாட்டிற்குள் தீர்வொன்றை காண விரும்புவதாக எதிர்க்கட்சித் தலை வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரி வித்துள்ளார்.

அதேவேளை போலியான தீர்வை ஏற்கப் போவதில்லையெனவும், இவ் வருடத்திற்குள் புதிய அரசியல் யாப்பு ஏற்படுத்தப்பட வேண்டுமென வலியு றுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவ ரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிற்கும் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசேயின் லூங்கிற்குமிடையில் சந்திப்பு ஒன்று நடை பெற்றுள்ளது. இச் சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்திப்பிரிவு தெரிவித்துள்ளது. புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பிலான தற்போதைய நிலைமை குறித்து சிங்கப்பூர் பிரதமருக்கு இரா. சம்பந்தன் தெளிவுபடுத்தியுள்ளார்.

இவ் நடைமுறைகளை வெற்றிகரமான ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவும் இணைந்து செயற்பட வேண்டியதன் தேவையை இரா.சம்பந்தன் தெரிவித்து ள்ளார்.

புதிய அரசியலமைப்புத் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்படும் பிழையான, தேவையற்ற அச்சங்களை நீக்குவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்புத் தொடர்பில் தெளிவூட்ட ல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தற்போது மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமான தல்ல என்பதையும் இரா.சம்பந்தன் சிங்கப்பூர் பிரதமருக்கு தெரிவித்துள்ளார்.  வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஒருமித்த, பிரிக்க முடியாத, பிரிவு படாத நாட்டிற்குள் தீர்வொன்றை விரும்புகிறார்கள்.

ஆகவே, புதிய அரசியல் யாப்பானது தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசை களை நிறைவேற்றுகின்ற ஒன்றாக அமைய வேண்டுமெனவும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

போலியான ஒரு தீர்வை எப்போதும் ஏற்கப் போவதில்லை எனவும் மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களில் தங்களது அதிகா ரங்களைப் பாவிக்கக்கூடிய ஓர் உண்மையான அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டி னையே வேண்டி நிற்பதாக தெரிவித்துள்ளார்.

இப் பிரச்சினை தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருக்க முடியாதெனவும், இந்த வருடத்திற்குள் புதிய அரசியல் யாப்பு ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரி வித்தார்.

மேலும், இந்நாடானது கடந்த காலங்களில் துர்அதிஸ்டவசமாக பிழையான பாதையில் பயணித்துள்ளது. அந்நிலைமைகளைச் சரிசெய்வதற்கு இதுவொரு நல்ல தருணம் எனவும் இரா.சம்பந்தன் சிங்கப்பூர் பிரதமரிடம் கூறியுள்ளார். மேலும் இலங்கையில் விசேடமாக வடக்குக் கிழக்கில் சிங்கப்பூர் முதலீட்டா ளர்கள், முதலீடுகள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டுமென சிங்க ப்பூர் பிரதமரிடம் வேண்டிக்கொண்டார்.

வடக்குக் கிழக்கில் உள்ள இளைஞர்கள் அர்ப்பணிப்புள்ள, கடின உழைப்பாளி கள். ஆனால், துர்அதிஷ்டவசமாக யுத்தத்தின் நிமித்தம் அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களும் திறன் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களும் கிடைக்க வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் அரசும் மக்களும் எமது இளைஞர்களின் திறன்களையும் அறிவை யும் விருத்தி செய்வதும் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்வதுமான முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வரவேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார்.

வடக்குக் கிழக்கில் காணப்படும் பெருமளவிலான வாய்ப்புக்களைச் சுட்டிக்கா ட்டிய இரா.சம்பந்தன் விசேடமாக, இயற்கைத் துறைமுகம் ஒன்றையும், பல வளங்களையும் கொண்ட திருகோணமலையில் முதலீடுகளை மேற்கொ ள்வது தொடர்பில் சிங்கப்பூர் கருத்தில் எடுக்க வேண்டுமென வேண்டிக்கொ ண்டார்.

இந்த நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் முயற்சியில் முதலீடுகள் ஒரு பலமாக அமையும் எனவும் சுட்டிக்காட்டினார். வடக்குக் கிழக்கில் முதலீடு களை மேற்கொள்ளுமாறு இரா.சம்பந்தன் விடுத்த கோரிக்கை குறித்து தான் சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடுவேன் என உறுதி வழங்கிய சிங்கப்பூர் பிரதமர், தனது அடுத்த விஜயத்தின்போது நிச்சயம் திருகோண மலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இலங்கைத் தமிழ்மக்கள் ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர், எதிர்காலத்தில் இரா.சம்பந்தன் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய தனது வாழ்த்துக்களையும் வழங்கி யுள்ளார்.