Breaking News

முல்லைத்தீவில் 1958 பேர் தபால் மூல வாக்கிற்கு தகுதியானர்கள் !

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக தபால் மூலம் வாக்க ளிக்க முல்லைத்தீவு மாவட்டத்தில் 1958 பேர் தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். இது தொடர்பில் முல்லைத்தீவு மாவ ட்ட உதவித் தேர்தல் ஆணையா ளரிடம் வினவியபோது இதனை தெரி வித்துள்ளாா். இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்க முல்லைத்தீவு மாவட்டத்தில் 1958 பேர் தகுதி பெற்றுள்ள தாகவும் இவர்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் கடந்த 12 ம் திகதி அஞ்சல் அலு வலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் முதல் கட்டமாக மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொலி சாருக்கு எதிர்வரும் 22ம் திகதி வாக்கு பதிவு இடம்பெறுமெனவும் தெரிவி த்தாா். 

அத்துடன் ஏனைய தபால் மூல வாக்களிப்பவர்களுக்கு 25 ம், 26 ம் திகதிகளில் வாக்கு பதிவு நடைபெறும் எனவும் இவற்றில் வாக்களிக்க தவறியவர்களுக்கு மாசிமாதம் முதலாம் இரண்டாம் திகதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலக த்தில் தமது வாக்கை பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

 அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைக்குமான தேர்தலுக்காக மாவட்டம் முழுவதும் 72 ஆயிரத்து 961 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளதாகவும் இவர்களுக்காக 134 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். 

வரும் மாசி மாதம் 10 ம் திகதி காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்காளர்கள் தமது வாக்குகளை பதிவுசெய்ய முடியும் எனவும் வாக்கு என்னும் பணிகள் வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுமென இறுதியாக மாவட்ட செயலகத்துக்கு வாக்குகள் எடுத்து வரப்பட்டு சபைகளுக்கான இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுமெனத் தெரிவி த்துள்ளார்.