Breaking News

தயா மாஸ்டர் மீது யாழில் கொடூரத் தாக்குதல்! (காணொளி)

யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சியின் கலை யகத்துக்குள் புகுந்த வயோதிபா் ஒருவர் அந் நிறுவனத்தின் செய்திப் பணிப்பா ளரைத் தாக்கியதுடன் கத்தியால் குத்திக் கொலை செய்ய எத்தனித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளாகிய தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி யாழ். போதனா வைத்தியசா லையில் சேர்க்கப்பட்டு மருத்துவ சோதனைகளின் பின் வீடு திரும்பியு ள்ளார். யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியிலுள்ள குறித்த தொலை க்காட்சி நிறுவனத்துக்குள் நேற்றைய தினம் மாலை கத்தியுடன் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த செய்திப் பிரிவுப் பணிப்பாளரை கதிரையால் தாக்கியுள்ளார்.

மேலும் அவர் கொண்டு வந்த கத்தியை காட்டி ஊழியர்களையும் மிரட்டியு ள்ளார். தாக்குதலை மேற்கொண்ட நபரை குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.