Breaking News

தேர்தலில் பின்னர் ஐ.தே.கவுடன் த.தே.கூட்டமைப்பு ஆட்சி


அண்மையில் அமைச்சர்களுக்கிடையேயான கூட்டத்திலிருந்து ஜெனாதிபதி வெளிநடப்பு செய்திருந்த நிலையில் நல்லாட்சி தொடருமா என்ற கேள்வி எழுந்திருந்தது. 


இருப்பினும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஐ.தே.க விலிருந்து வெளியேறினால் ஐ.தே.கவுடன் இணைந்து த.தே.கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும் என இன்றைய ஞாயிறு வாரப்பத்திரிகையான தமிழ்த்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை ஐ.தே.கவும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் முரண்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களை சேர்த்து வைக்கும் செயற்பாட்டில் த.தே.கூட்டமைப்பின் கொழும்பு தலைமை ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.