Breaking News

கிழக்கு பல்கலை கழக சமூகத்தின் வாக்கு வீட்டுக்கில்லை(காணொளி)

கிழக்கு பல்கலைக்கழக சமூகம் மற்றும் கிழக்கு
மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரினதோ அல்லது அவர்களது குடும்பத்தினரதோ வாக்குகள் கூட்டமைப்புக்கோ அல்லது எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சிகளுக்கோ கிடைக்காது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர் பல வருடங்களாக அரச மற்றும் கூட்டமைப்பினர் வழங்கிய எந்த வாக்குறுதியும் நடைமுறைக்கு வரவில்லை என தெரிவித்த அவர்கள் போராட்டத்தின்போது தாம் கூறியபடி அரசியல்வாதிகளை புறக்கணிப்போம் எனற செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.