Breaking News

“இனி அதுவும் என்னிடமே”: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு !

நாட்டின் நிதித்துறையை கையாளும் நிர்வகிக்கும் அதிகாரம் இனியும் ஐ.தே.க. வசம் இருக்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவி த்துள்ளார்.

கேகாலையில், அரசியல் கூட்டமொ ன்றில் நேற்று (20) கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை த் தெரிவித்தார். “கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார த்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஐ.தே .க. வசம் வழங்கியிருந்தேன். ஆனால், இனி அந்தப் பொறுப்பை நானே ஏற்று க்கொள்ளவிருக்கிறேன். பிரதமர் வசமிருக்கும் பொறுப்பை எனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவுள்ளேன். எனது தலைமையிலான ஒரு விசேட சபையே நாட்டின் நிதித் துறையை இனிமேல் கையாளும். “மூன்று மாதங்களுக்கு முன்பாகவே அந்தச் சபை அமைக்கப்பட்டு விட்டது.

உள்ளூராட்சித் தேர்தல் நிறைவடைந்ததும் ஊழலற்ற நாட்டைக் கட்டியெழு ப்பும் எனது பயணம் ஆரம்பமாகும். எனது பயணத்தில், நாட்டு மக்கள், கல்வி மான்கள், சமயத் தலைவர்கள் அனைவரும் ஒருங்கி ணைத்துக்கொள்ளப்ப டுவர்.” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.