வேட்பாளர்களே... சொத்து அறிக்கை சமர்ப்பித்தீர்களா....?
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த அறிக்கையை அளிக்க வேண்டிய கடைசி நாள் இன்று (20). இது எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினத்தினுள் சொத்து அறி க்கையைச் சமர்ப்பிக்காத வேட்பாள ர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படு மெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர் தல் விதிமுறைகளின்படி, வேட்பாள ர்கள் தேர்தலுக்கு முன் தமது சொத்து அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டி யது கட்டாயம். அப்படித் தவறுமிட த்து அவர்களது தேர்தல் அலுவலகங்களின் இயக்கம் தடை செய்யப்படுவது உட்பட அவர்கள் மீது பல நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.