பிணைமுறி மோசடி விவாதத்தில் கோப் குழு அறிக்கை விவரிப்பில் ரணில்.! (காணொளி)
கோப் குழு நடத்திய விசாரணை அறிக்கை மீதான சட்டமா அதிபரின் அடுத்த கட்ட நடவடிக்கையை சபைக்கு தெரிவிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரிடம் நேற்று திங்க ட்கிழமை தாம் வினவியதாகவும், இத ன்படி சட்டமா அதிபர் வழங்கிய பதிலை சபைக்கு சமர்பிக்கவுள்ளதா கவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 அள வில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலை மையில் ஆரம்பமாகியது.
இலங்கை மத்திய வங்கியிலான பிணைமுறி மோ சடி விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய நிதிமோசடி விவகாரம் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவா தம் இன்று இடம்பெறுகின்றது.
இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்படி தெரிவித்தார்.
மேலும் இந்த விசாரணை அறிக்கைகள் மீதான விவாதம் மூன்று நாட்களுக்கு நடைபெறுமென பிரதமர் ரணில் விக்கிர மசிங்க தெரிவித்தார்.
தேர்தல் காலம் என்பதால் உறுப்பினர்களின் வருகை குறைவாக இருக்கின்ற காரணத்தினால் இன்று கலந்துகொள்ள முடியாமற்போயுள்ள உறுப்பினர்க ளுக்கு எதிர்வரும் 20,21ஆம் திகதிகளிலும் சபை கூடும்போது உரையாற்ற வாய்ப்பளிக்க கட்சித் தலைவர்கள் சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அரச முயற்சியாண்மையிலான ஊழல், மோசடி விவகாரங்களில் நாடாளு மன்ற உறுப்பினர்கள் 30 பேர் சிக்கியிருப்பதால் அதுகுறித்து விசாரணை செய்த கோப் குழுவின் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆட்சிப்படுத்த ப்பட்டுள்ளது.