Breaking News

முல்லைத்தீவில் அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் வாள்வெட்டு - 9பேர் காயம்

இன்று அதிகாலை நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 9 பேர் படுகாய மடைந்துள்ளதுடன் 14பேர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்...

முல்லைத்தீவு - கிச்சிராபுர பகுதியில் குறித்த சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றதுடன் வாள்வெட்டுத் தாக்குதலில் 9 பேர் படுகாயமடை ந்துள்ளதுடன் 14பேர் கைது செய்ய ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளின் முஸ்லிம் பிரதி நிதிகளின் ஆதரவாளர்களு க்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாகி வாள்வெட்டு தாக்குதலில் முடிவடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 14 நபர்களை கைது செய்து ள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்த வண்ண முள்ளனர்.