Breaking News

பிணைமுறி அறிக்கை விவாதத்தை தடுத்த சுமந்திரன்; வாசுதேவ நாணயகார குற்றச்சாட்டு!

பிணைமுறி அறிக்கை குறித்து சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து விவாதத்தை தடுத்தனர். 

இது திட்டமிட்ட சதியென கூட்டு எதி ர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார குற்றம் சுமத்தி யுள்ளார். எனினும் தான் முன்வைத்த கோரிக்கை நியாயமானது, சட்ட விதி முறைக்கு ஏற்றதாகவே அமைந்து ள்ளதென சுமந்திரன் வாசுவின் குற்ற ச்சாட்டை நிராகரித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றுகையில் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரி விக்கையில்....

 மத்திய வங்கி பிணைமுறி அணைக்குழு அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் நேற்றைய தினம் விவாதத்தி ற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. 

இவை குறித்து விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவிருந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் நானே விவாதிக்க தயாரானேன். எனினும் பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ் மொழியில் இல்லாத காரணத்தி னால் தம்மால் விவாதத்தில் ஈடுபட முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் எம்.பி சுமந்திரன் சபையில் முரண்பட்டார். 

அவரது கோரிக்கையின் நியாயத்தை கருத்தில் எடுத்து விவாதத்தை பிற்போட முடியும் என்பதை நானும் ஏற்றுக்கொண்டேன். எனினும் அதன் பின் ஆரா ய்ந்து பார்த்ததில் கடந்த 6 ஆம் திகதி நடத்தவிருந்த விவாதத்தின் போது மொழி பெயர்ப்பு பிரச்சினையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளி க்கொணரவில்லை. 

பாராளுமன்றச் செயற்பாடுகள் தொடர்பிலான கூட்டத்திலும் இப் பிரச்சினை யினை முன்வைக்கவில்லை. அப்போதெல்லாம் வாய்மூடி இருந்த சுமந்திரன் ஏன் இறுதி நேரத்தில் விவாதத்தைக் குழப்பினார். 

ஏனெனில் பிணைமுறி அறிக்கை குறித்து நாம் சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க வேண்டுமென்ற தேவை அரசாங்கத்திற்கு இருந்தது. பிரதமரும் நெருக்கடியில் இருந்த நிலையில் இவர்கள் இரு தரப்பும் இணை ந்து முன்னெடுத்த சதியென நான் சபையில் குற்றம் சுமத்துவதாக தெரி வித்தார்.