Breaking News

பிர­தமர் பத­வியை ஏற்க சஜித், கரு மறுப்பு.!

பிர­தமர் பதவி தொடர்பில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடியினால் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவும் சபா­நா­யகர் கரு ­ஜ­ய­சூ­ரி­யவும் பிர­தமர் பத­வியை ஏற்­க மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் முழு­மை­யான அங்­கீ­காரம் இன்றி பிர­தமர் பத­வியை ஏற்­றுக்­கொள்ள முடி­யாதென சஜித் பிரே­ம­தா­ஸவும் கரு ­ஜ­ய­சூ­ரி­ய வும் தெரிவித்துள்ளனர். 

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­ன­வுடன் ஐக்­கிய தேசியக் கட்சி தோல்­வி­ய­டைந்த நிலையில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பத­வியை ராஜி­னாம செய்ய வேண்டுமென வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது. 

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஒரு­சாரார் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவை பிர­த­ம­ராக நிய­மிக்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­யவை பிர­த­ம­ராக நிய­மிக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருந்தார். இந்த நிலை­யி­லேயே அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவும் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­யவும் தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் முழுமையான அங்கீகாரமி ன்றி பிரதமர் பதவியை ஏற்கப் போவதில்லையென தெரிவித்துள்ளனர்.