Breaking News

முரண்­பாடு ஆரம்பம்.!

தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் விட­ய த்தில் முரண்­பாடு நில­வி ­வ­ரு­கின்­றது.  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேற்று முன்­தினம் இரவு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஐக்­கிய தேசி­யக் ­கட்சி அமை ச்­சர்கள் சந்­தித்து பேசி­ய­தை­ய­டுத்து நிலைமை சுமு­க­ம­டைந்­த­தாக தெரி­விக்­கப்­பட்ட போதிலும் இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் இன்­னும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் முடிவு­களை அடுத்து அர­சாங்­கத்­திற்குள் பெரும் நெருக்­கடி நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கடந்த திங்­கட்­கி­ழமை இரவு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யினர் சந்­தித்து பேசி­ய­போது பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து ரணில் விலகி அக்­கட்­சியை சேர்ந்த மற்­றொ­ரு­வரை பிர­த­ம­ராக நிய­மிக்­க­வேண்­டு­மென ஜனா­தி­பதி வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். 

இதற்கு ஐக்­கிய தேசி­யக்­ கட்­சி­யினர் மறுப்பு தெரி­வித்­தி­ருந்­தனர். இந்த நிலை யில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் தனித்து ஆட்சி அமைக்­க­வேண்­டு­மென்று ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யினர் வலி­யு­றுத்­தினர். ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் அமைச்­சர்கள், பின்­வ­ரிசை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என பல தர ப்­பி­னரும் தனித்து ஆட்சி அமைக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற ஐக்­கிய தேசி­யக்­கட்சி அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள், பிரதி அமைச்­சர்­களின் கூட்­டத்­திலும் இதற்­கான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. 

தேசிய அர­சாங்­கத்தை முன்­கொண்டு செல்­வ­தற்­கான வழி­வ­கைகள் குறித்து ஆராய்­வது என்றும் அந்த முயற்­சிக்கு ஜனா­தி­பதி இணங்­கா­விடின் தனித்து ஐக்­கிய தேசி­யக்­கட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வது என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இந்­தக்­கூட்­டத்தை அடுத்து ஜனா­தி­ப­தியை ஐக்­கிய தேசி­யக்­கட்சி அமைச்­சர்கள் சந்­தித்து பேசி­யி­ருந்­தனர்.

ஆட்சியமைக்க சுதந்திரக்கட்சி முயற்சி

இதன் பின்னர் சுமுக நிலை உரு­வாகும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட போதிலும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் அமைச்­சர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதவி விலக வேண்டும் என்ற விட­யத்தில் விடாப்­பி­டி­யாக உள்­ள­தாக தெரி­கின்­றது. 

பிர­தமர் பதவி வில­கா­விட்டால் ஐக்­கிய தேசி­யக்­கட்சி உறுப்­பி­னர்­களில் ஒரு பகு­தி­யி­ன­ரையும் வர­வ­ழைத்து சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னரின் ஆட்­சியை அமை ப்போம் என்றும் கருத்து தெரி­வித்து வரு­கின்­றனர். 

இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மையின கட்சிகளை ஒன்றிணைத்து சுதந்திரக்கட்சியின் ஆட்சியினை அமைப்பது குறித்தும் அவ ர்கள் ஆலோசித்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகின்றது. 

இவ் விடயம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்­றக்­குழு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேற்று முன்­தினம் இரவு சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளது. 

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன தலை­மையில் இந்­தக்­குழு ஜனா­தி­ப­தியை சந்­தித்­த­துடன் பாரா­ளு­மன்­றத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சுதந்­தி­ரக்­கட்­சிக்கு எதி­ராக எடுக்கும் நட­வ­டிக்­கை­களை முறி­ய­டிக்கும் வகையில் தாம் ஆத­ரவு வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ள­தாக தெரி­கின்­றது.

இது இவ்­வா­றி­ருக்க ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்­குள்ளும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நிலைப்­பாடு மேலோங்­கி­வ­ரு­வ­தாக தெரி­கின்­றது. பெரு­ம­ள­வானோர் அவ­ருக்கு ஆத­ர­வாக இருக்­கின்­ற­போ­திலும் சில தரப்­பினர் ஐக்­கிய தேசி­யக்­ கட்­சிக்குள் மாற்றம் ஏற்­ப­ட­வேண்­டு­மென்று கோரி வரு­கின்­றனர். 

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­மையில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­ய தன் அவ­சியம் குறித்து அவர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். பிர­தமர் ரணில் விக்­கி­ர­மசிங்க தலை­மையில் நேற்று அல­ரி­மா­ளி­கையில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி அமைச்­சர்­க­ளு­டனான சந்­திப்பு இடம்­பெற்­றது. 

இச் சந்­திப்­பின்­போது பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆராயப்­பட்டு பல குழுக்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன.இந்தக் குழுக்கள் நியமனம் தொடர்பில் பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். குழுக்களை அமைப்பதன் மூலம் அரசாங்கத்தை முன்கொண்டு செல்ல முடியாது.

அரசாங்கத்தை முன்கொண்டு செல்ல வேண்டுமானால் கட்சிக்குள் மாற்ற ங்களை செய்யவேண்டும். குழுக்களை அமைத்து நேரத்தை கடத்த கூடாது என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலை தொடர்ந்தால் அடுத்த மாகாணசபைத் தேர்தலில் தோல்வி அடையவேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.