Breaking News

இலங்கை சிறையிலிருந்து 113 இந்திய மீனவர்கள் விடுதலை.!

எல்லை தாண்டி சட்­ட­வி­ரோத மீன்­பி­டியில் ஈடு­பட்ட இந்­திய மீன­வர்கள் 113 பேரை விடு­விக்க இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இந்­திய மீன­வர்­களை விடு­விக்கக் கோரி இந்­திய துணைத் தூத­ரகம் இலங்கை அர­சாங்­கத்­திற்கு விடுத்த பரிந்­து­ரைக்கு அமை­வாக இவர்­களை விடு­விக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கை கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்­பி­டியில் ஈடு­படும் இந்­திய மீன­வர்கள் தொடர்ச்­சி­யாக இலங்கை கடற்­ப­டை­யி­னரால் கைது­செய்­யப்­ப­டு­வது வழ­மை­யா­கி­யுள்ள நிலையில் இவ்­வாறு இலங்கை கடல் பரப்பில் சட்­ட­வி­ரோத மீன்­பி­டியில் ஈடு­பட்டு யாழ்ப்­பாணம் சிறையில் 121 தமி­ழக மீன­வர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். கடந்த மாதம் இலங்கை கடற்­ப­டை யால் கைது­செய்­யப்­பட்ட மண்­டபம் பகுதி மீனவர் ஒருவர் விடுவிக்கப்பட்ட நிலையில் நேற்று மண்­ட­பத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இந்­திய மீன­வர்­களை பிணையில் விடு­விக்க இலங்கை அர சாங்கத்திற்கு இந்­திய துணைத் தூத­ரக அதி­கா­ரிகள் மூலம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. 

அதனை தொடர்ந்து சிறையில் உள்ள மீன­வர்­களில் 113 மீன­வர்­க­ளை விடு­தலை செய்ய இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இந்­திய மீன­வர்­களில் முதல் கட்­ட­மாக 113 மீன­வர்­களை விடு­தலை செய்ய சட்­டமா அதிபர் திணைக்­களம் உத்­த­ர­விட்­டுள்­ளது. 113 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தர விட்டதாக யாழ்.மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.