Breaking News

ஸ்ரீ தேவி மரணத்தில் ஏதோ மர்மம்; சில துப்புகள் கிடைத்துள்ளதாம்; (காணொளி)

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில் மிகப்  பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தமிழகத்தில் உள்ள சிவகாசி மாவட்டத்தில் 1963 ஆம் ஆண்டு பிறந்த இவர். 1967 ஆம் ஆண்டு துணைவன் திரைப்படம் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் வந்தவர்.

அதை தொடர்ந்து, பல படங்கள் நடித்த இவர், ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் 80-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். அவற்றில் 16 வயதினிலே மற்றும் மூன்றாம் பிறை போன்ற படங்கள் மிகவும் முக்கியமானவை.

அதைத்தொடர்ந்து, ஹிந்தியிக்கு சென்ற ஸ்ரீ தேவி தமிழில் நடிக்க வில்லை, ஹிந்தியில் பெரிய கதாநாயகியாகி விட்டார். பிறகு சில வருடங்கள் கழித்து தமிழில் மீண்டும் ஒரு படம் நடித்தார். இந்த நிலையில், திருமண நிகழ்வொ ன்றிற்காக கணவருடன் பிப்ரவரி 24 ஆம் தேதி துபாய் சென்றுள்ளார் ஸ்ரீதேவி. அங்கு இரவு 11.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார் என அவருடைய உறவினர் சஞ்சய் தெரிவி த்துள்ளார்.

இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். ஆனால் முதல் மகள் ஜான்வி கபூர் தடக் பட த்தின் படப்பிடிப்பு காரணமாக திருமணத்திற்கு செல்லவில்லை.

இந்த அவரது உடல் ரசிகர்களின் அஞ்சலிக்காக காலை 09:00 மணியில் இருந்து மதியம் 11:30 மணிவரை வைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் பல நடிகர்கள் அவர்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இர ங்கல்களை தெரிவித்து வரும் பாலிவுட் பிரபலங்கள், ஸ்ரீ தேவியின் மரண த்தில் ஏதோ மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

ஏன்னெனில் ஸ்ரீதேவி, எப்போதும் உணவை டயட் முறையில் தான் எடுத்து க்கொள்வாராம். உடல்நிலையில் முழு கவனம் செலுத்தும் இவருக்கு சிறிய நோய் கூட வந்ததில்லை அப்படி இருக்கும் போது இந்த மரணத்தில் ஏதாவது நடந்திருக்க வாய்ப்புயிருக்கிறது என்று பலர் கூற, கணவர் போனி கபூர் திரு மணத்தின் CCTV கேமராவை பார்வையிடுமாறு தெரிவித்துள்ளார்.

அதைப்போலவே, கேமராவில் ஏதோ சில விசித்தரமான விஷயங்கள் நடந்து ள்ளதை காவல் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியு ள்ளது. இது எந்த அளவிற்கு உண்மையெனத் தெரியவில்லை. பல வீடியோ க்கள் மூலம் இச் செய்தி உலாவிக்கொண்டிருக்கின்றன.