Breaking News

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் இன்டர்போல் கைதாகினார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சர்வ தேச பொலிஸாரால் கைதாகியுள்ளார். 

அமெரிக்கா சென்றுகொண்டிருந்த உத யங்க வீரதுங்கவை, துபாய் விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்த சர்வதேச பொலிஸார் அவரை துபாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து, உதயங்கவை இல ங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று துபாய் சென்றுள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் மிக் ரக விமானத்தை கொள்வ னவு செய்தபோது, பாரிய நிதி மோசடி இடம்பெற்றதாக உதயங்க மீது குற்ற ஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விசாரணைகள் நிதிக்குற்ற தடுப்பு பிரிவினரால் முன்னெடு க்கப்பட்டு வருகின்ற நிலையில், விசாரணைகளுக்கு சமூகமளிப்பதற்கு உத யங்க தவறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக சர்வதேச பிடி யாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்றைய தினம் கைது செய்யப்பட்டார். 

கடந்த மூன்று வருட காலமாக இலங்கை அரசாங்கம் அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்து வந்த போதும், அதனை நிராகரித்த உதயங்க வீர துங்க தமது ராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளார். 

கடந்த ஆட்சியாளர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டபோது, உத யங்கவையும் சந்தித்தமைக்கான புகைப்பட ஆதாரங்கள் வெளியாகின.