நல்லாட்சியின் மோசடிகளுக்கு ஜனாதிபதியே பொறுப்பு - மகிந்த.!
எனது அமைச்சரவையில் மோசடி இடம்பெற்றது என்றால் நானும் அதில் சம்பந்தப்பட்டுள்ளேன் என்று தான் அர்த்தம்.
அதே போன்று தற்போதைய நல்லா ட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை யில் அமைச்சர்கள் பெரும்பாலா னோர் மோசடிகளில் ஈடுபடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அப்படியனால் ஜனாதிபதியும் இணை ந்து தான் அதற்கு பொறுப்புக் கூற வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு நாட்டின் தலைவர் போன்றல்லாமல் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை நரகத்திற்கு அழைத்து செல்லாமல் ஓயப்போவதி ல்லையென அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டிருக்கின்றார்.
அவர் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அவரது உடல் நலமே பாதிக்கப்படும்.
இப்போது கூட அவரின் செயற்பாடுகள் அவ்வாறு தான் உள்ளன. மேடைப் பேச்சுக்களின் போது என்ன பேசுகின்றோம் என்று தெரியாமலேயே பேசிக் கொண்டிருக்கின்றார்.
அரசாங்கத்தால் கடன் பெறப்பட்டுள்ளது. ஆனால் அது பற்றிய எந்த தகவலும் இல்லை, அந்த கடன் தொகைக்கான வேலைத்திட்டங்களும் நடைபெறவில்லை எனக் கூறுகின்றார். அப்படியென்றால் அந்த பணத்திற்கு என்ன நடந்தது என ஜனாதிபதி தான் கூற வேண்டும்.
என்னுடைய அரசாங்கம் தான் பாரிய கடன்பெற்றது என இவர்கள் குறை கூறிக்கொண்டிருக்கின்றனர்.
நான் பெற்ற கடனில் ஆட்சியை இவர்களிடம் ஒப்படைக்கும் போது 70 வீத அபிவிருத்தியை செய்திருந் தேன். ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் பூர்த்தியாகியும் நான் பெற்றதை விடவும் அதிக கடனை மாத்திரமே பெற்றுள்ளார்களே தவிர நூற்றுக்கு 30 வீத அபிவிருத்தி கூட மேற்கொள்ளப்படவில்லை.
என்னால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களையும் நிறுத்திவிட்டா ர்கள். ஒரு முறை மக்கள் ஏமாந்து விட்டார்கள். மீண் டும் மீண்டும் அவர்களை ஏமாற்ற முடியாது. மீண்டும் ஏமாற மக்கள் தயாராக இல்லை. எனவே இம்முறை தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.