Breaking News

எம்மீதிருந்த களங்கம் களையப்பட்டது-ஈ.பி.டி.பி பெருமிதம்

எங்களை ஒட்டுக்குழு கொலைகாரர்கள் என்றவர்கள்
இன்று எங்கள் ஆதரவை கேட்டு நிற்கின்றார்கள் இதன்மூலம் அவர்கள் சொல்லி வந்தவை எல்லாம் பொய் என்பது நிருபணமாகியுள்ளது.

இவ்வாறு இன்று யாழில் இடம்பெற்ற ஈ.பி.டி.பி.இன் ஊடக மாநாட்டில் கலந்துகொண்ட அக்கட்சியின் ஈ.பி.டி.பி மாநகரசபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

எங்கள்மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டியவர்கள் இப்போது எமது ஆதரவை நாடுவதன் மூலம் அவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலேயே இதுவரை குற்றம் சுமத்தியுள்ளார்கள் என்பது வெளிப்படையாக தெரிவதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

இதுவரைகாலமும் துரோக கட்சியாக அனைவராலும் இனங்காட்டப்பட்ட ஈ.பி.டி.பி இன்று தமிழரசு கட்சி செய்த கூட்டாட்சி மூலம் தமிழர்களை எங்கே கொண்டுசெல்லப்போகிறது என அச்சம்கொள்ள செய்கின்றது.