2019-ம் ஆண்டில் அமெரிக்காவால் இலங்கை அரசுக்கு வரப்போகும் நெருக்கடி!
2019 மாசி மாதத்துக்குப் பின்னரான காலப்பகுதியில், இலங்கையை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெரிக்கா கொண்டு வரும் என்று வெளிநாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகத் தமி ழர் பேரவையின் குழுவினர், அமெரி க்காவின் தெற்கு மத்திய ஆசிய விவ காரங்களுக்கான முதன்மை பிரதி உத விச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாரைச் சந்தித்துப் பேச்சு நடா த்தியுள்ளனா். இதன் போதே, 2019 மாசி மாதத்துக்குப் பின்னர், இலங்கையை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெரிக்கா கொண்டு வரும் என்று அலிஸ் வெல்ஸ் அம்மையார் தெரிவித்தார் என தெரிவிக்கப்படுகிறது.
நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை அமைத்தல் உள்ளிட்ட, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1, 34/1 தீர்மானங்களை முழுமையாக நடை முறை ப்படுத்துவதற்கு, 2017ஆம் ஆண்டில் இலங்கைக்கு இரண்டு ஆண்டு கால அவ காசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையிலும், நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் செய ற்பாடுகள் மந்தகதியிலேயே இடம்பெறுவதாக, ஐ.நா மனித உரிமை ஆணை யாளர் கடந்த வாரம் தெரிவித்துள்ளாா்.
அதேவேளை, 2019 மாசி மாதத்துடன், இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவ காசம் முடிவடையவுள்ளது. இந்த நிலையிலேயே, 2019 மாசி மாதத்துக்குப் பின்னர், இலங்கையை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெ ரிக்கா கொண்டு வரும் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஆங்கில ஊடாகமொன்றினால் பிரசுரமாகியுள்ளது.