பாராளுமன்றில் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் அமைச்சர்கள் யார்??? !
பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு ஆதரவளித்த 16 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்களும் அடுத்த பாராளுமன்ற அமர்வில் எதி ர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.
வலையமைப்புக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ள அவர் அர சாங்கத்தின் ஒரு பகுதியாக செயற்ப டுவதற்கு சுதந்திரக்கட்சியின் 16 உறு ப்பினர்களும் விரும்பவில்லையெ னத் தெரிவித்துள்ளாா்.
19 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளு மன்ற அமர்வின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதி ர்க்கட்சி வரிசையில் அமர்வார்கள் என தெரிவித்துள்ளாா்.
ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்து விட்டோம், உரிய பதிலை எதிர்பார்க்கின்றோம், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் ஜனாதி பதிக்கு எங்கள் ஆதரவை வழங்குவோமெனத் தெரிவித்துள்ளாா்.